எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற ஆஸ்திரேலியா 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
3-வது உலக டெஸ்ட்...
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித், வெப்ஸ்டர் அரைசதம் அடித்தனர்.
ஊசலாட்டம்...
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 43 ரன்களுடன் ஊசலாடியது. கேப்டன் பவுமா (3 ரன்), டேவிட் பெடிங்ஹாம் (8 ரன்) களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான பந்து வீச்சு தாக்குதலை தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் எதிர்கொண்டனர். நிறைய பந்துகளை தொடவே இல்லை. இதனால் முதல் ஒரு மணி நேரம் விக்கெட் விழாமல் சமாளித்தனர். ஸ்கோர் 94 ஆக உயர்ந்த போது பவுமா (36 ரன், 84 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்ஸ் பந்து வீச்சில் 'கவர்' திசையில் நின்ற லபுஸ்சேனிடம் சிக்கினார்.
மளமளவென சரிந்தன...
இதைத் தொடர்ந்து பெடிங்ஹாம் ஒரு பக்கம் போராட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கம்மின்ஸ், அவர்களின் பேட்டிங் வரிசையை முற்றிலும் உருக்குலைத்தார். கைல் வெரைன் (13 ரன்), மார்கோ யான்சென் (0), கேஷவ் மகராஜ் (7 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர். பெடிங்ஹாம் தனது பங்குக்கு 45 ரன்கள் (111 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார்.
138 ரன்னில்...
முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 57.1 ஓவர்களில் 138 ரன்னில் அடங்கியது. ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு கேப்டனின் மகத்தான பந்து வீச்சாக இது பதிவானது. மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவும் பேட்டிங்கில் சொதப்பியது. முதல் இன்னிங்சில் டக்-அவுட் ஆன கவாஜா 2-வது இன்னிங்சிலும் சோபிக்கவில்லை. 6 ரன்னில், ரபடாவின் வேகத்துக்கு இரையானார்.
நிலைக்கவில்லை...
அதே ஓவரில் கேமரூன் கிரீனும் (0) வீழ்ந்தார். எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஸ்சேன் (22 ரன்), ஸ்டீவன் சுமித் (13 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆடுகளத்தில் பந்து சரமாரியாக 'ஸ்விங்' ஆனதால் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை துரிதமாக தாரை வார்த்தனர். டிராவிஸ் ஹெட் (9 ரன்), வெப்ஸ்டர் (9 ரன்), கம்மின்ஸ் (6 ரன்) உள்ளிட்டோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அப்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 73 ரன்களுடன் மோசமான நிலையில் தவித்தது.
நெருக்கடியான சூழல்...
இந்த நெருக்கடியான சூழலில் களம் கண்ட விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கணிசமாக ரன் எடுத்து ஒரு வழியாக ஆஸ்திரேலியாவை மூன்று இலக்கத்தை தொட வைத்தார். அலெக்ஸ் கேரி 43 ரன்களில் (50 பந்து, 5 பவுண்டரி) எல்.பி. டபிள்யூ. ஆனார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து மொத்தம் 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
281 ரன்கள் முன்னிலை...
தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. மிட்செல் ஸ்டார்க் (16 ரன்), நாதன் லயன் (1 ரன்) இருவரும் இன்று தொடர்ந்து பேட்டிங் செய்தனர். விரைவில் ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டார்க் பொறுப்புடன் செயல்பட்டு ரன்களை திரட்டினார். அவர் 136 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 217 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் - ஹேசல்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மொத்தமாக ஆஸ்திரேலிய அணி 281 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 281 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை விரட்டிப்பிடிக்க தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
14 Jun 2025துபாய் : துபாயில் உள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பு உள்ளது இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு 274 ஆக உயர்வு
14 Jun 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
-
பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
14 Jun 2025சென்னை, வீடு வழங்கும் திட்டம், மீன்வளத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பிரதமர் முகத்தைத் தாங்கி செயல்படும் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என முதல்வர் மு.
-
ஏவுகணை வீசினால் தெஹ்ரான் எரியும்: ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
14 Jun 2025டெல் அவிவ் : ஏவுகனணகளை வீசினால் தெஹ்ரான் எரியும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-06-2025.
14 Jun 2025 -
ஒடிசா: பாதுகாப்புப்படை வீரர் பலி
14 Jun 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் நக்தலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலியானார்.
-
முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி
14 Jun 2025சென்னை : உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மடிக்கணினி வழங்கி, மேலும் வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையையும் வழங்கிய முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி தெரிவித்த
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
14 Jun 2025டெஹ்ரான் :: ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருவதை முன்னிட்டு இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
14 Jun 2025தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் பலி-320 பேர் படுகாயம்
14 Jun 2025இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்து உள்ளனர். 320-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Jun 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ரூ.74 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆன நிலையில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது.&nbs
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் 3 பேர் பலி
14 Jun 2025ஜெருசலேம் : இஸ்லே் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனில் தொடர் தாக்குதல்: மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
14 Jun 2025மாஸ்கோ : உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வருவதை முன்னிட்டு மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா.
-
நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி
14 Jun 2025சென்னை, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் நேற்று வெளியிடப்பட்டது.
-
விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு
14 Jun 2025சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
-
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
14 Jun 2025சென்னை, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
விமான விபத்து: 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்
14 Jun 2025காந்திநகர் : 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ.
-
நீலகிரிக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்’ 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
14 Jun 2025சென்னை, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு: மொத்தம் 210 வேலை நாட்கள்
14 Jun 2025சென்னை, நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
-
சப்-கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது
14 Jun 2025சென்னை, சப்-கலெக்டர், டி.எஸ்.பி.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Jun 2025சென்னை : காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி - ஒரு டிரா: ஆதிக்கம் செலுத்தும் பவுமா
14 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
-
காவல் நிலையம் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
14 Jun 2025சென்னை, வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதி.மு.க.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி
14 Jun 2025திருச்சி : வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
-
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து கார்கே ஆறுதல்
14 Jun 2025காந்திநகர் : விமான விபத்தில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் தலைவர் கார்கே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.