எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் , விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற விதமாக, நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் . மேலும் போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
___________________________________________________________________________________________________
சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா உள்பட 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து 8 வீராங்கனைகளில் ஒருவராக இறுதி சுற்றுக்குள் நுழைந்த சம்ரா இறுதிப்போட்டியில் 453.1 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இந்த பந்தயத்தில் உலக சாதனையாளராக விளங்கும் பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது சம்ரா இந்த ஆண்டு தொடக்கத்தில் பியூனஸ் அயர்சில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.
மற்ற இந்திய வீராங்கனைகள் ஆஷி சோக்சி (589) 11-வது இடமும், அஞ்சும் மோட்ஜில் (586) 27-வது இடமும், ஸ்ரீயங்கா சடான்ஜி (582) 53-வது இடமும், நிஸ்சால் (580) 60-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இளவேனில் வெண்கலம் வென்றிருந்தார்.
___________________________________________________________________________________________________
விம்பிள்டன் பரிசு தொகை..?
லண்டனில், வரும் ஜூன் 30 முதல் ஜூலை 13 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 622 கோடி. இது, கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 35 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்.
முதல் சுற்றோடு திரும்பும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 76 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். இதேபோல இரட்டையர், கலப்பு இரட்டையர், வீல்சேர், ஜாம்பவான்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பந்து 'பிட்ச்' ஆகும் இடத்தை எலக்ட்ரானிக் முறையில் கண்காணிக்க உள்ளனர்.
___________________________________________________________________________________________________
கருண் நாயருக்கு பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் , கருண் நாயரை பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்புவது என்பது எளிதானது அல்ல.
உள்ளூர் கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு ரன் குவித்துள்ளீர்கள் என்பது விஷயமல்ல. ஒரு போதும் நம்பிக்கையை இழக்காமல், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேராடி மீண்டெழும் மனப்பாங்கு தான் முக்கியம். அது தான் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
___________________________________________________________________________________________________
இந்திய அணியில் ராதா யாதவ்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வரும் 28-ம் தேதி நடக்கிறது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அணியில் இடம் பிடித்து இருந்த 20 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சுசி உபாத்யாய் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீராங்கனையை அறிவித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவை மகளிர் தேர்வு கமிட்டி மாற்று வீராங்கனையாக தேர்வு செய்துள்ளது.
___________________________________________________________________________________________________
ஐ.சி.சி. பதிவு வைரல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன்.11 முதல் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்கா 138க்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸி. அணி 2ஆம் நாள் முடிவில் 144க்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைனை ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் ரன் ஓடும்போது தெரியாமல் மோதினார்.
அடுத்ததாக ஆஸி. கீப்பர் அலெக்ஸ் கேரியை தென்னாப்பிரிக்க வீரர் மகாராஜா ரன் ஓடும்போது மோதினார். இந்த விடியோ காட்சிகளை ஐ.சி.சி. தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு டபிள்யூ.டபிள்யூ.இ. ஒலியுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காக இரு அணிகளும் 100 சதவிகித உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
___________________________________________________________________________________________________
ஆலன் வரலாற்றுச் சாதனை
அமெரிக்காவில் நடைபெறும் எம்.எல்.சி. (மேஜர் லீக் கிரிக்கெட்) டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்காக விளையாடும் பின் ஆலன் அதிவேகமாக சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 269.08 ஆக இருந்தது.
எம்.எல்.சி. டி20 தொடரில் முதல் போட்டியிலேயே இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணி 269/5 ரன்கள் குவிக்க, வாஷிங்டன் பிரீடம் அணி 13.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் அடித்து பின் ஆலன் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
___________________________________________________________________________________________________
தயாராகும் அஸ்டெகா மைதானம்
மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது. மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய எல்.இ.டி. திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், சி.சி.டி.வி. கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.
மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும். இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
14 Jun 2025துபாய் : துபாயில் உள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பு உள்ளது இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு 274 ஆக உயர்வு
14 Jun 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-06-2025.
14 Jun 2025 -
பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
14 Jun 2025சென்னை, வீடு வழங்கும் திட்டம், மீன்வளத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பிரதமர் முகத்தைத் தாங்கி செயல்படும் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என முதல்வர் மு.
-
ஒடிசா: பாதுகாப்புப்படை வீரர் பலி
14 Jun 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் நக்தலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலியானார்.
-
ஏவுகணை வீசினால் தெஹ்ரான் எரியும்: ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
14 Jun 2025டெல் அவிவ் : ஏவுகனணகளை வீசினால் தெஹ்ரான் எரியும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
14 Jun 2025டெஹ்ரான் :: ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருவதை முன்னிட்டு இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி
14 Jun 2025சென்னை : உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மடிக்கணினி வழங்கி, மேலும் வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையையும் வழங்கிய முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி தெரிவித்த
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் பலி-320 பேர் படுகாயம்
14 Jun 2025இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்து உள்ளனர். 320-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Jun 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ரூ.74 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆன நிலையில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது.&nbs
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
14 Jun 2025தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் 3 பேர் பலி
14 Jun 2025ஜெருசலேம் : இஸ்லே் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
14 Jun 2025சென்னை, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு
14 Jun 2025சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
-
உக்ரைனில் தொடர் தாக்குதல்: மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
14 Jun 2025மாஸ்கோ : உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வருவதை முன்னிட்டு மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா.
-
நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி
14 Jun 2025சென்னை, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் நேற்று வெளியிடப்பட்டது.
-
விமான விபத்து: 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்
14 Jun 2025காந்திநகர் : 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ.
-
சப்-கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது
14 Jun 2025சென்னை, சப்-கலெக்டர், டி.எஸ்.பி.
-
நீலகிரிக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்’ 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
14 Jun 2025சென்னை, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
காவல் நிலையம் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
14 Jun 2025சென்னை, வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதி.மு.க.
-
நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு: மொத்தம் 210 வேலை நாட்கள்
14 Jun 2025சென்னை, நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
-
இஸ்ரேல் தொடர் தாக்குதல்: காசாவில் 16 பேர் பலி
14 Jun 2025காசா சிட்டி : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 3 நாடுகளுக்கு செல்கிறார்: பிரதமர் நரேந்திர மோடி
14 Jun 2025டெல்லி, அரசு முறை பயணமாக இன்று முதல் சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
-
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து கார்கே ஆறுதல்
14 Jun 2025காந்திநகர் : விமான விபத்தில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் தலைவர் கார்கே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Jun 2025சென்னை : காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.