எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கி ஆக.21 வரை நடக்கிறது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஆக.13 மற்றும் ஆக.14 ஆகிய தேதிகளில் மட்டும் கூட்டம் நடைபெறாது. கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து டில்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமை ஏற்றார். கூட்டம் முடிந்து வந்த அவர் நிருபர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது:- பஹல்காம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் உட்பட அனைத்து முக்கியமான பிரச்னைகளையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அது பாராளுமன்ற விதிகளின்படி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அனைத்து பரிந்துரைகளையும் நாங்கள் கேட்டுள்ளோம். அனைத்துக் கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கும். பாராளுமன்றத்தின் உள்ளே தான் பதில் அளிப்போமே, தவிர வெளியே இல்லை என்றார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


