எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, கல்வியின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி தொடங்கிய பாராளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த பாராளுமன்ற முடக்கம் நேற்றும் 5-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, 'மாநில கல்வி உரிமைகளை பறிப்பதற்காக தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளதா?' என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய கல்வித்துறை மந்திரி சுகந்தா மஜும்தார் அளித்துள்ள பதில் வருமாறு:-
கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் தரமான கல்வியை அளிப்பதில் முறையே மத்திய, மாநில அரசுகளுக்கு சரிவிகித பொறுப்பு உள்ளது. புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க மொழியை ஒரு தடையாக வைத்திராமல் செயல்பட இது உதுவும். கல்வியின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவில்லை.
மத்திய, மாநில அளவிலான முறையான கண்காணிப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடும் மட்டுமே இன்றியமையாதது. இக்கொள்கையை பற்றி விழிப்புணர்வை அளிக்கவும், மேலும் புதுமையான அம்சங்களைப் பற்றி ஆலோசிக்கவும் பயிற்சி வகுப்புகள், கருத்துப்பகிர்வை உறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அதுசார்ந்த கல்வி அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பதிலளித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


