முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலை பயன்படுத்தினால் அபராதம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை

புதன்கிழமை, 30 ஜூலை 2025      தமிழகம்
metro 2025-01-04

சென்னை, மெட்ரோ ரயிலில் மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மெல்லும் புகையிலை பொருட்களின் விளைவாக எச்சில் துப்புவதாலும் குப்பைகள் போடுவதாலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றது. அந்த வகையில், மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்டறிய முடியாததால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் உடல் சோதனைகள் மேற்கொள்ளப்படும். கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, விதி மீறல்களை தீவிரமாக கண்டறிந்து பாதுகாப்பு பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து