எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன் : இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி இன்று ஓவலில் தொடங்குகிறது. இத்தகைய முக்கியமானதொரு போட்டியில் இந்திய அணியின் முன்னணிப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பதிலாக ஆகாஷ் தீப் அணிக்குள் வருகிறார்.
ஆச்சரியமில்லை...
நீண்ட கால உடல்தகுதியை முன்னிட்டு பும்ராவின் காயங்களிலிருந்து காக்கவும் இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக மருத்துவக் குழுவினர் பும்ராவிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு ஆச்சரியமில்லை என்றாலும் ஒரு முக்கியமான போட்டியில் அதுவும் இங்கிலாந்து பேசியப் பேச்சிற்கும் கடந்த போட்டியில் கடைசியில் ஜடேஜா, சுந்தரை அவமானப்படுத்தும் விதமாக ஹாரி புரூக்கை விட்டு பந்து வீசச் செய்ததற்கும் பழிதீர்க்கும் போட்டியில், தொடரை டிரா செய்ய வேண்டிய வெற்றியை நோக்கியப் போட்டியில், பும்ராவை உட்கார வைப்பது உண்மையில் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஆட்டம் டிரா ஆனது...
எட்ஜ்பாஸ்டனில் பும்ரா இல்லாமல் வெற்றி பெற்றதையடுத்து அவரை உட்கார வைக்கும் அதிர்ஷ்ட செண்டிமெண்ட் விளையாடுகிறது என்று நம்புவதற்கும் இடமுண்டு. பும்ரா விளையாடி முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றது, பிறகு லார்ட்ஸில் தோற்றது, இதில் இரண்டிலும் பும்ரா ஆடினார். ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் 3வது இன்னிங்ஸில் இந்திய அணி எழுச்சி பெற்றதையடுத்து ஆட்டம் டிரா ஆனது.
பந்து வீச்சிலும் சதம்...
இந்தத் தொடரில் மொத்தம் 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன, வரலாறு காணாத ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் பும்ராவின் பணிச்சுமை 3 டெஸ்ட் போட்டிகளில் என்றாலும் சுமை அதிகமே. ஓல்ட் டிராபர்டில் 33 ஓவர்களை பும்ரா வீசினார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு இன்னிங்ஸில் இவ்வளவு ஓவர்கள் வீசியதே இல்லை. முதல் முறையாக பந்து வீச்சிலும் அவர் சதமெடுத்தது ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட்டிலேயே.
ஓய்வு கொடுக்காமல்...
இத்தகைய பிட்ச்களில் அவரை ஆடவிட்டு ஒழித்து விடக்கூடாது என்பது சரிதான், அவரும் மணிக்கு 140 கிமீ வேகப்பந்திலிருந்து வெகுவாகக் குறைத்தே வீசினார். நடப்புத் தொடரில் இவரும் சிராஜும் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சமநிலை எய்தியுள்ளனர். சிராஜ் மட்டும் என்ன பாவம் செய்தார் என்று தெரியவில்லை, ஒரு டெஸ்ட் கூட ஓய்வு கொடுக்காமல் ஆடவைக்கின்றனர். குடும்பங்களில் சம்பாதிக்கும் மூத்த மகனுக்கு தனி ட்ரீட்மெண்ட் நடக்குமே அதுதான் பும்ராவுக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிராஜ், ஆகாஷ் தீப்...
ஆகாஷ் தீப் காயம் காரணமாகக் கடந்த டெஸ்ட்டில் ஆடவில்லை, இப்போது காயத்திலிருந்து மீண்டு பிராக்டீஸ் கிரீன் டாப் பிட்ச்களில் அருமையாக ஸ்விங் செய்கிறார். எப்படியாயினும் சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஸ்தீப் சிங் இந்த முறை ஆடுவார்கள் என்றே தெரிகிறது. ரிஷப் பந்த் ரூல்டு அவுட் என்பதால் அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பர்/பேட்டராக இணைவார். பொதுவாக மேகமூட்ட வானிலை ஆங்காங்கே பிட்சில் தெரியும் கொஞ்சமான புற்கள் நிச்சயம் இந்தப் போட்டியிலும் குல்தீப் யாதவ்வை களமிறக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 6 days ago |
-
ஆணவப்படுகொலைக்கு உரிய நீதி: சீமான் உறுதி
02 Aug 2025சென்னை : ஆணவப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என சீமான் உறுதியளித்துள்ளார்.
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
02 Aug 2025சென்னை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.1,120 ஏற்றம் கண்டு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
02 Aug 2025சென்னை, தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா..? - மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
உத்திரமேரூர் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
02 Aug 2025சென்னை : உத்திரமேரூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-08-2025.
02 Aug 2025 -
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு
02 Aug 2025சென்னை, டாக்டர் அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் மதன்பாப் காலமானார்
02 Aug 2025சென்னை : திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப் உடல்நலக்குறைவால் காலமானார்.
-
அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் மாற்றி விடுதலை செய்யப்பட்ட கைதி
02 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் கைதி மாற்றி விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 2 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
ஓ.பி.எஸ். அரசியல் வாழ்க்கை குறித்து போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி
02 Aug 2025புதுக்கோட்டை, “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
-
எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
02 Aug 2025சென்னை, தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
-
த.வெ.க. நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் ஆனந்த் படத்தை பயன்படுத்த தடை
02 Aug 2025சென்னை, த.வெ.க. நிகழ்ச்சிகளில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
பாலியல் வழக்கில் தண்டனை அறிவிப்பு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 'ஆயுள்'
02 Aug 2025பெங்களூரு, பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20-வது தவணை தொகையை விடுவித்தார் பிரதமர்
02 Aug 2025டெல்லி, பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகையை விடுவித்தார்.
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
02 Aug 2025தூத்துக்குடி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
-
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
02 Aug 2025சென்னை : இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்த்தேன்: பிரதமர் மோடி பேச்சு
02 Aug 2025காந்தி நகர், கடவுள் சிவபெருமான் ஆசியுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்த்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் முதல்வர்
02 Aug 2025சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இ.பி.எஸ். வழிபாடு
02 Aug 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழிபாடு செய்தார்.
-
கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
02 Aug 2025சென்னை, பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
-
காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒரேநாளில் 106 பேர் பலி
02 Aug 2025காஸா : காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அறிக்கை: ராகுல் மீது ராஜ்நாத்சிங் தாக்கு
02 Aug 2025பாட்னா, ஒரு அரசியலமைப்பு அமைப்பைப் பற்றி அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தகுதியானது அல்ல என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் க
-
அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்
02 Aug 2025தேனி, அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
கச்சா எண்னெய் இறக்குமதி விவகாரம்: இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளது: ட்ரம்ப்
02 Aug 2025வாஷிங்டன் : இந்தியா நல்ல முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.