எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பிந்தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டும் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்திற்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 13-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இன்றி இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் இரண்டாம் இடத்தையும், மேகன் ஷட் 3-ம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா நான்காம் இடதையும் தக்கவைத்துள்ளனர்.
__________________________________________________________________________________________________
தரவரிசை: அபிஷேக் முதலிடம்
ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில் நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். பஞ்சாபில் அமிர்தசரஸைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (24 வயது) இந்திய டி20 அணியில் 2024இல் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் 535 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 33.43ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 193.84ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பிறகு, எப்படி முதலிடம் பிடித்தார் தெரியுமா? டிராவிஸ் ஹெட் புள்ளிகள் குறைந்ததால் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை வருமாறு., 1. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள் (இந்தியா), 2. டிராவிஸ் ஹெட் - 814 புள்ளிகள் (ஆஸி.), 3. திலக் வர்மா - 804 புள்ளிகள் (இந்தியா), 4. பிலிப் சால்ட் - 791 புள்ளிகள் (இங்கிலாந்து), 5. ஜாஸ் பட்லர் - 772 புள்ளிகள் (இங்கிலாந்து).
__________________________________________________________________________________________________
புதிய பயிற்சியாளராக அருண்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருண், 2022 ஆம் ஆண்டில் இருந்து நிகழாண்டு வரை சிறப்பாக பணியாற்றினார். இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022 ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.
சஞ்சீவ் கோயங்காவின் லக்னோ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
__________________________________________________________________________________________________
இந்தியா-பாக்., போட்டி நடக்குமா..?
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
அவ்வகையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் அப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆகவே அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
31 Jul 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும்.
-
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை முதல்வரை சந்தித்த ஓ.பி.எஸ். பேட்டி
31 Jul 2025சென்னை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அதிக ரிஸ்க் எடுத்து விட்டேன்: காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்
31 Jul 2025லண்டன்: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை
31 Jul 2025புதுடெல்லி: கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது
31 Jul 2025திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தியாவும் - ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்கள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
31 Jul 2025புதுடில்லி: இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
-
டாஸில் தோற்பது குறித்து கவலை இல்லை: கேப்டன் ஷுப்மன் கில்
31 Jul 2025லண்டன்: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம் என்று இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்தது ஏன்..? இந்தியா விளக்கம்
31 Jul 2025பர்மிங்காம்: லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (டபிள்யூ.சி.எல்.) தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறித்து இந்திய அணி காரணம் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: சரிவை சந்தித்த ஜெய்ஸ்வால்
31 Jul 2025துபாய்: ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சரிவை சந்தித்துள்ளார்.
தரவரிசை பட்டியல்...
-
அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்
31 Jul 2025சிவகங்கை: திருப்புவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்த அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.
-
ஓவல் கடைசி டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்
31 Jul 2025லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
-
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
31 Jul 2025நெல்லை: 4-வது நாளாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
-
கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா தலைமையில் போராட்டம்
31 Jul 2025புதுடெல்லி, கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில், பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கில்
31 Jul 2025லண்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி
31 Jul 2025சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
-
யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு
31 Jul 2025ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
-
கீவ் நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலி
31 Jul 2025உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டம்: நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
31 Jul 2025சென்னை: “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை நாளை (ஆகஸ்ட் 2-ம் தேதி) முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
நட்புடன் நலம் விசாரிப்பு: பிரேமலதாவுக்கு முதல்வர் நன்றி
31 Jul 2025சென்னை: நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு
31 Jul 2025சென்னை, முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
பறக்கும் ரயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? கனிமொழி
31 Jul 2025சென்னை: பறக்கும் ரயில் நிறுவனம் குறித்து பாராளுமன்றத்தில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவு
31 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.