எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு செய்து கோலாகலமாக கொண்டாடினர்.
ஆடிப் பெருக்கு தினத்தில் செய்யக்கூடிய எந்தவொரு நல்ல செயலுக்கும் புண்ணியம் பெருகும். விவசாயிகள் இந்த தினத்தில் விதைகளை விதைப்பார்கள். இந்நாளில் விதைத்தால் விளைச்சல் பெரும் என்பது ஐதீகம். ஆடி 18 அன்று மகா லட்சுமியை வழிபட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். மக்கள், குறிப்பாக புது மணத்தம்பதிகள் ஆற்றங்கரைக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் படையலிட்டு, காவிரி அன்னையை பெண்கள் வழிப்பட்டனர். புதிய மஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். இது போல் மேட்டூர், திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரைகளில் மக்கள் பூஜை செய்தனர். தம்பதிகள் மஞ்சள் கயிறு , புது தாலி மாற்றி கொண்டனர். அரிசி, பழம், பால் என படையலிட்டு பூஜை நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில், பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர். ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், ஆடிப்பெருக்கு விழாவை, ஏராளமான மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மாவட்டத்தில், காவிரிக்கரை அமைந்துள்ள மோகனூர், ப.வேலூர், ஜேடர்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள் கருகமணி வைத்து, கன்னிமார் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மாலை, ஆற்றில் நவதானியங்களால் ஆன முளைப்பாரி விடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெண்கள், படையலிட்டுசிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதமாக போற்றப்படுகிறது. ஆடி மாதம் அன்று பெண்கள் நதிக்கரையில் அம்மனுக்கு படையிட்டு வணங்குகின்றனர். காவிரியில் நடப்பதைப்போலவே நெல்லையிலும் தீராநதி தாமிரபரணிக்கரையில் ஆடிப்பெருக்கு நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமிகோயில் படித்துறையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்களுக்கு தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகளுக்கு மகசூல் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஆடிப்பெருக்கு அன்று வழிபடுகிறார்கள். பல வகையான பொருட்களை வைத்தும் படைத்தனர். பெண்கள் தாலிச்சரடை மாற்றிக் கொண்டனர். ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களிலும் இந்த வழிபாடு நடந்தது.
கடலூர் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதிகள், பொது மக்கள் ஏராளமானோர் கடலூர் சில்வர் கடற்கரையில் கூடினர். வாழை இலையில் அரிசி, வெல்லம், பொறி, பழங்களை வைத்து இயற்கையை வழிபட்டனர். பின்னர் சுமங்கலி பெண்கள் புதிதாக தாலி கயிறுகளை மாற்றினர். புதுமண தம்பதிகள் இயற்கையை வழிபட்டு தங்கள் திருமண மாலைகளை நீரில் விட்டனர்.
இதே போல் தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றில் புதுமணத் தம்பதியினர் வந்து, படையிலிட்டும் வழிபாட்டில் ஈடுபட்டு திருமண மாலையை ஆற்றில் விட்டனர். இது போல சிதம்பரம் அருகே வல்லம் படுகை கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் புதுமண தம்பதியினர் பொதுமக்கள் குவிந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா பதில்
05 Aug 2025வாஷிங்டன்: ரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.
-
அரசு பஸ்சில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பா? தமிழ்நாடு அரசு விளக்கம்
05 Aug 2025சென்னை, பெண் பயணி வீடியோ பதிவுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-08-2025.
05 Aug 2025 -
2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
05 Aug 2025சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு
-
மதுரையில் வரும் 21-ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
05 Aug 2025சென்னை, மதுரையில் வரும் 21-ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு
05 Aug 2025ஒகேனக்கல், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துவிட்டது.
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.12-ல் கோவை பயணம்
05 Aug 2025சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி கோவை செல்கிறார். கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.
-
அமெரிக்கா வரிவிதிப்புக்கு ரஷ்யா பதிலடி
05 Aug 2025மாஸ்கோ, அமெரிக்கா வரிவிதிப்புககு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
-
இந்தியா மீதான ட்ரம்ப் குற்றச்சாட்டு: சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு மறுப்பு
05 Aug 2025அமெரிக்கா, இந்தியா மீதான ட்ரம்பின் குற்றச்சாட்டு தவறானது சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது.
-
உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு 17 பேர் பலி; 50 பேரின் கதி என்ன? பிரதமர் மோடி நிலைமையை கேட்டறிந்தார்
05 Aug 2025டேராடூன், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால், தாராலி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர்.
-
பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
05 Aug 2025சென்னை, பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ராமதாசின் தொலைபேசி ஹேக்: டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
05 Aug 2025சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாசின் தொலைபேசி வை-பை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
கவின் கொலை வழக்கு: 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
05 Aug 2025மதுரை, கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது
05 Aug 2025வாஷிங்டன், அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ.13 லட்சம் டெபாசிட் செய்துதான் விசா பெற முடியும் என அறிவிப்பு வெளியாகிறது.
-
சிறையில் ரேவண்ணாவுக்கு ரூ.540 கூலி
05 Aug 2025பெங்களூரு, சிறையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரூ.540 தினக்கூலி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
05 Aug 2025புதுடில்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியால் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
-
ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லை கேப்டனாக்க இதுவே சரியான நேரம் சுனில் கவாஸ்கர் யோசனை
05 Aug 2025லண்டன்: ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்ய இதுவே சரியான நேரம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
05 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை என அமெரிக்காவுக்க இந்தியா பதிலளித்துள்ளது.
-
ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்: மோடி சாடல்
05 Aug 2025புதுடில்லி, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என தேசிய ஜனநாயக கூட்டணி பார்லி., குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ராகுலை கடுமையாக சாடினார்.
-
மெக்சிகோ சிறையில் கலவரம்: 7 பேர் அடித்துக்கொலை
05 Aug 2025டக்ஸ்பான், மெக்சிகோவில் சிறையில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு;-
-
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மறைவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
05 Aug 2025சென்னை: முன்னாள் ஆளுநர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
05 Aug 2025சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளு
-
தி.மு.க., அ.தி.மு.க. மீது சீமான் கடும் விமர்சனம்
05 Aug 2025சென்னை, தி.மு.க., அ.தி.மு.க.வை பேய், பிசாசு என குறிப்பிட்டு சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
முதன்முறை காசாவுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது கனடா
05 Aug 2025ஒட்டாவா: காசாவுககு முதன்முறையாக நிவாரண பொருட்களை கனடா வழங்கியது.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பார்லி., இரு அவைகளும் ஒத்திவைப்பு
05 Aug 2025டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால்