Idhayam Matrimony

புதுக்கோட்டையில் துணிகரம்: விவசாயி வீட்டை உடைத்து 160 பவுன் நகை கொள்ளை

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      தமிழகம்
theft 2025-01-10

Source: provided

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் விவசாயின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருடைய மகன்கள் இருவரும் திருமணமாகி சென்னை மற்றும் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர். முருகேசனும் அவரது மனைவியும் புதுக்கோட்டை பாசில் நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான ராங்கேயத்துக்கு சென்றுவிட்டு இன்று 11 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதனிடையே வீட்டில் சோதனை செய்த போது 160 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கொள்ளையர்கள் பிடிபடாமல் இருக்க வீட்டில் உள்ள அறைகளில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றது போலீசார் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைகளை கோள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து