எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.
இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு டாலரில் பணம் கொடுக்க வேண்டும். அதன் காரணமாக தினசரி மாறுபடும் அமெரிக்க டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கமும் தங்கத்தின் விலையில் தாக்கம் கொடுக்கிறது. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனாலும் இந்தியாவில் தங்கம் விலை கூடுகிறது.
2025 ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58,000 ஆக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூலை 23-ம் தேதி ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை 700 ரூபாய் அளவில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 6, புதன்கிழமை நிலவரப்படி, சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூ.9,380 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.75,040 ஆகவும் மீண்டும் புதிய உச்சத்துடன் விற்பனையானது.
அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.10,233 ஆகவும் சவரன் விலை ரூ.81,864 ஆகவும் புதிய உச்சம் கண்டுள்ளது. வெள்ளி விலை கூட புதிய உச்சம் தொட்டுள்ளது. அதாவது, ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,26,000 ஆகவும் இருக்கிறது.
தற்போது 22 காரட் தங்கம் விலை பவுன் ரூ.75,000-ஐ தாண்டி இருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 25 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88-ஐ நெருங்கும் அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இது, தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
சர்வதேச பொருளாதார பின்னடைவுகள், பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், பெரிய முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை உயர்ந்து ஆபரணத் தங்கம் விலைவும் விண்ணை முட்டியிருக்கிறது. இந்த விலை உயர்வுப் போக்கு தொடரும் என அஞ்சப்படுகிறது.
அத்துடன், ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறும் என்பதால் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு, அதாவது 2025 இறுதிக்குள், ஒரு கிராம் ரூ.10,000 எனவும், ஒரு சவரன் ரூ.80,000 எனவும் தங்கம் விலை உச்சத்தை எட்டக்கூடும் என வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இனி ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்லும்
06 Aug 2025ராமேசுவரம்: ராமேசுவரம் இருந்து பனாரஸ் வரை செல்லும் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானின் புதிய அதிபராக ராணுவ தளபதி பொறுப்பேற்பு
06 Aug 2025பாகிஸ்தான்: பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
-
தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்
06 Aug 2025டெல்லி: டெல்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொண்டைமான்
06 Aug 2025சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் அக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: டாப் 5-ல் ஜெய்ஸ்வால்
06 Aug 2025லண்டன்: ஐ.சி.சி.
-
காஸாவில் உணவின்றி 200 பேர் பலி
06 Aug 2025காஸா: காஸாவில் உணவு கிடைக்காமல் பசியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபருடன் பேசுவேன்: பிரேசில் அதிபர்
06 Aug 2025பிரேசிலியா: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்பை நான் அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை.
-
ஆன்லைன் நிறுவன ஊழியர்களுக்கு மானிய விலையில் வாகனம்: தமிழக அரசாணை வெளியீடு
06 Aug 2025சென்னை: ஆன்லைன் நிறுவன ஊழியர்களுக்கு மானிய விலையில் மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியீட்டுள்ளது.
-
உத்தரகாசி பேரிடரில் மாயமான 28 கேரள சுற்றுலாப்பயணிகள் கண்டுபிடிப்பு
06 Aug 2025உத்தரகண்ட்: உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உத்தரகாண்ட் மேக வெடிப்பு: மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்
06 Aug 2025டேராடூன்: உத்தரகாண்ட் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்தார்.
-
ஐ.சி.சி. ஜூலை மாத விருது: சுப்மன் கில் பெயர் பரிந்துரை
06 Aug 2025துபாய்: ஐ.சி.சி.யின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
-
யு.பி.ஐ. மூலம் ஒரேநாளில் 70.7 கோடிக்கு பணப்பரிவர்த்தனை
06 Aug 2025டெல்லி: இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி. தரவரிசை: முகமது சிராஜ் முன்னேற்றம்
06 Aug 2025துபாய்: இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது டெஸ்ட் ஐசிசி தரவரிசையில் உச்ச நிலையான 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
-
தீவிரமடையும் பருவமழை: பாக்.கில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
06 Aug 2025லாகூர்: பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபருடன் அமெரிக்க தூதர் சந்திப்பு
06 Aug 2025மாஸ்கோ: போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் அமெரிக்க தூதர் சந்தித்து பேசினார்.
-
பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகை பதிவு இனி அவசியம் சி.பி.எஸ்.இ. புதிய உத்தரவு
06 Aug 2025சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக் கூடிய சி.பி.எஸ்.இ.
-
சிராஜ் குறித்து மொயின் அலி
06 Aug 2025இந்திய வேகப் பந்துவீச்சாளர் வீரர் சிராஜ் ஓவரில் விளையாடுவது எப்போதும் சவால் மிகுந்தது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
-
உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 பேர் உயிருடன் மீட்பு 11 ராணுவ வீரர்கள் மாயம்
06 Aug 2025உத்தரகண்ட்: உத்தரகண்டின் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-08-2025.
07 Aug 2025 -
புதுச்சேரி நெசவு தொழிலாளர்களுக்கு 20% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ரங்கசாமி
07 Aug 2025புதுச்சேரி, தொழிலாளர்கள் நெசவுக் கூலி அகவிலைப்படியில் 20 சதவீதம் ஆகஸ்ட் முதல் உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி
07 Aug 2025புதுடெல்லி, தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
-
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு
07 Aug 2025புதுடெல்லி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் என்கவுன்ட்டர் நடந்தது ஏன்..? மாவட்ட எஸ்.பி விளக்கம்
07 Aug 2025உடுமலை, உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி
-
சமூகத்துக்கு பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு கோரிக்கை
07 Aug 2025சென்னை, எம்.எஸ்.சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அமெரிக்காவுக்கு வலிமையுடன் பதிலளிக்க வேண்டும்: பினராயி
07 Aug 2025திருவனந்தபுரம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.