எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டேராடூன்: திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் உத்தரகாசியில் மீட்புப் பணிகள் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டம் தாராலி கிராமத்தில் ஆகஸ்ட் 5 அன்று பகல் 1:45 மணிக்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மலை உச்சியில் இருந்து சேறு, சகதியுடன் கரை புரண்டு வந்த வெள்ளம் குறுக்கே இருந்த வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள், கட்டடங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது.இதில் ஏராளமான கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இதனால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளில் 3வது நாளாக மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 65 பேர் நேற்று இங்கிருந்து 432 கி.மீ தொலைவில் உள்ள மாட்லி நகரத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் மூன்றாவது நாளாகத் தொடரும் நிலையில், இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


