முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை: பாக்., விலகல்

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
7-Rsm-58

Source: provided

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது.  இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.  பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வருவதற்காக பாகிஸ்தான் சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழு விசாவுக்கு விண்ணப்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி போட்டியில் இருந்து விலகி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பையில் விளையாட இயலாது என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இருந்த போதிலும் அவர்கள் இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். பாகிஸ்தானுக்கு பதிலாக வங்காள தேசத்தை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

யு.எஸ் ஓபன்: பரிசுத்தொகை உயர்வு

டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகளாகும். ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். அல்காரசுக்கு (ஸ்பெயின்) பிரெஞ்சு ஓபன் பட்டம் கிடைத்தது. பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை மேடிசன் கெய்சும் (அமெரிக்கா), பிரெஞ்சு ஓபனை கோதா கவூப்பும் (அமெரிக்கா) விம்பிள்டன் பட்டத்தை இகாஸ்வியா டெக்கும் (போலந்து) கைப்பற்றினார்கள்.

ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 24-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. செப்டம்பர் 7-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.789 கோடியாக பரிசு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும். 2-வது இடத்துக்கு தலா ரூ.21.5 கோடி பரிசு தொகை கிடைக்கும்.

காலிறுதியில் இன்டர் மியாமி

எம்எல்எஸ் தொடரில் விளையாடும்போது மெஸ்ஸிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், லீக்ஸ் கோப்பையில் இன்டர் மியாமியின் போட்டியைப் பார்க்க மெஸ்ஸி பார்க்க வந்திருந்தார். கடந்த போட்டியில் இரண்டு அசிஸ்ட் செய்து அசத்திய ரோட்ரிகோ டி பால் தனது முதல் கோலை இன்டர் மியாமி அணிக்காக இந்தப் போட்டியில் 45ஆவது நிமிஷத்தில் அடித்தார்.

தொடர்ந்து லூயிஸ் சௌரஸ் 59-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து தொப்பியை அணிந்து அதை தனது மகளுக்கு சமர்பித்தார். கிளப் யுனிவர்சிடாட் நேஷனல் அணி 39ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது. கடைசியில் இன்டர் மியாமி 3-1 என வென்றது. இந்தப் போட்டியில் 56 சதவிகித பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இன்டர் மியாமி 488 பாஸ்களை செய்து அசத்தியது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக நடப்பு சாம்பியன் இன்டர் மியாமி அணி லீக்ஸ் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நவோமி இறுதி போட்டிக்கு தகுதி 

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டியான கனடியன் ஓபனில் அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் டென்மாா்க்கின் கிளாரா டௌசனும் மோதினார்கள். இந்தப் போட்டியில் ஒசாகா 6-2, 7-6 (9-7) என நேர்செட்களில் வென்றார். கனடியன் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஒசாகா பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த கனடாவில் வசிக்கும் 18 வயதான விக்டோரியோ போகோவுடன் 27 வயதான நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில் மோதுகிறார். இது குறித்து ஒசாகா, “போகோ விளையாடுவதை இன்று பார்த்தேன். எங்களுக்கு முன்னிலையில் தான் அவர்களது போட்டி நடைபெற்றது. போட்டியில் அழுத்தமே இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. மேட்ச் பாயின்டிலிருந்து போகோ திரும்ப வந்தது இந்த வயதில் மெச்சத்தக்கதாக இருந்தது” என்றார். 2021-க்குப் பிறகு டூர் அளவில் தனது முதல் பட்டத்தை வெல்ல ஒசாகா முனைப்புடன் இருக்கிறார்.

ஈட்டி எறிதல்: அன்னு ராணிக்கு தங்கம் 

போலந்தில் நடைபெற்ற 8-ஆவது வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் தொடரில் தனது இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றுள்ளார்.

32 வயதாகும் அன்னு ராணு இந்திய அளவில் அதிக தூரம் ஈட்டி எறிந்ததில் தேசிய சாதனை படைத்த வீராங்கனையாக இருக்கிறார்.  தேசிய அளவில் அன்னு ராணி 2022-இல் 63.82 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததே இதுவரை அவரது சிறந்த சாதனையாக இருக்கிறது. முதல்முயற்சியில் 60.95 மீட்டருக்கு எறிந்த அன்னு ராணி இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு எறிந்தார். கடைசியாக 6ஆவது முயற்சியிலும் 60.07 மீட்டர் எறிந்தார். புவனேஸ்வரில் வரும் ஆக.10ஆம் தேதி நடைபெறும் உலக தடகள கான்டினென்டல் டூர் வெண்கல பிரிவில் அன்னு ராணு கலந்துகொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து