எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20 ஆயிரத்து 21 பேருக்கு ரூ.672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பல்லாவரத்தில்...
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் தகுதியான பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா நேற்று (ஆக்.9) பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.17,000 கோடி மதிப்பிலான 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
நிலம்தான் அதிகாரம்...
அப்போது முதல்வர் மு.க.பேசுகையில், “தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன். கல்வியும் - மருத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்கள். ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவை என்பது, உண்ண உணவு - உடுக்க உடை - இருக்க இடம். இதில், உணவும் - உடையும் எளிதாக கிடைத்துவிடலாம்; ஆனால், இருக்கும் நிலம் எளிதாக கிடைத்துவிடாது. ஏனென்றால், நிலம்தான் அதிகாரம். காலுக்கு கீழ் சிறிது நிலமும் - தலைக்கு மேல் ஒரு கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான். அதனால்தான், பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன்.
ஏழை எளிய மக்களுக்கு...
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை மூலமாக பட்டா வழங்கிக் கொண்டிருக்கிறோம். சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழைக் குடும்பங்களையும், பெண்களையும் முன்னிலைப்படுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதை நம்முடைய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. இப்படி வழங்கப்படுகின்ற “கலைஞர் கனவு இல்லம்” - “அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்” போன்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
ஐந்தே மாதத்தில் 7 லட்சம்....
5 மாதத்திற்குள் 5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயித்தோம். இதனால், ஐந்தே மாதத்தில் எத்தனை பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது தெரியுமா? 7 லட்சத்து 27 ஆயிரத்து 606 பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது. இதுவும் போதாது என்று சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும், பிற நகர்ப்புற பகுதிகளிலும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டோம். அதில், 79 ஆயிரத்து 448 தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, 63 ஆயிரத்து 419 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்து, 20 ஆயிரத்து 221 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். மீதமுள்ள பட்டாக்களை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
குடும்பங்களின் கனவை...
இப்படி, மே 2021-லிருந்து, தற்போது வரைக்கும் வழங்கப்பட்டிருக்கும் மொத்த பட்டாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 17 இலட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். அதாவது பல லட்சம் குடும்பங்களின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம். இதில், இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 41 ஆயிரத்து 858 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். இந்த விழாவில், ஆயிரத்து 672 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு நான் வழங்கியிருக்கிறேன்.
தமிழகத்தின் வளர்ச்சி...
தென்குமரியிலிருந்து சென்னை வரைக்கும் சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்துகிறோம். தொழில் நிறுவனங்களை கொண்டு வருகிறோம். வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம். இதனால்தான், 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோடு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. விரைவில் இந்திய நாடே தமிழகத்தின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து வியப்படையும்.
சாதிக்க முடியாததை...
2011-லிருந்து 2021 வரைக்கும் பத்தாண்டுகாலம் பின்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை, இந்த நான்கு ஆண்டுகளில், மீட்டெடுத்து, வளர்ச்சி பாதையின் உச்சத்திற்கு கொண்டு நாம் சேர்த்திருக்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவரது நண்பரான ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே சரியில்லை என்று பேசுகிறார். அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல்தான். இந்த அடிப்படை கூட தெரியாமல், அறிவுஜீவி போல இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால், இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை - மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை - இந்த ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறானே. இதுதான் அவர்கள் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்.
இன்னும் அதிகமான வளர்ச்சி....
பழனிசாமி கூட்டணி வைத்திருக்கும் மத்திய அரசால்கூட மறைக்க முடியாத - மறுக்க முடியாத அளவிற்கு சாதனைகள் செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நாம் கொண்டு செல்கிறோம். இதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் வேகமாக, இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம். இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்த்து, “இதுதான் வளர்ச்சி இதுதான் வழி” என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம். அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து பார்க்கத்தான் போகிறீர்கள். என்னைப் பொறுத்தவரைக்கும், நான் மக்களுக்காக உழைப்பவன், இந்த ஸ்டாலினை மக்கள் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு எங்கள் பயணம் தொடரும்” இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
ஆசிய கோப்பை தொடர் : இந்தியா-பாக்., போட்டி ரத்து? - யு.ஏ.இ. கிரிக்கெட் வாரியம் பதில்
09 Aug 2025துபாய் : இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைமை இயக்க அதிகாரி கூறியுள்ளார்.
-
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
09 Aug 2025சென்னை, இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த
-
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: களமிறங்குகிறார் விராட்கோலி?
09 Aug 2025மும்பை : இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
கம்பன் கழக பொன்விழா நிறைவு விழா: தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
09 Aug 2025சென்னை, பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும்,‘வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; இதுதான் கம்பர் கண்ட கனவு’ என்றும் முதல்வர் மு.க.ஸ்
-
672.52 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள்: அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20,021 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
09 Aug 2025பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20 ஆயிரத்து 21 பேருக்கு ரூ.672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக
-
சுமார் ரூ.1,650 கோடி செலவில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் : முதல்வா் சித்தராமையா ஆலோசனை
09 Aug 2025பெங்களூரு, : கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
09 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.10) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு பட்டுப்புடவையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் : அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
09 Aug 2025அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி உரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றின
-
ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
09 Aug 2025தாம்பரம், தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-08-2025.
10 Aug 2025 -
இன்னிங்ஸ், 359 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து
09 Aug 2025வெல்லிங்டன் : ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
மெஸ்சி, அர்ஜென்டினா அணி வருகை திடீர் ரத்து : கேரள ரசிகர்கள் அதிர்ச்சி
09 Aug 2025திருவனந்தபுரம் : மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் வருகை ரத்து செய்யப்பட்டதால் கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை பார்த்து உலகமே வியந்தது: பிரதமர்
10 Aug 2025பெங்களூரூ : ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமி
-
இந்திய அணி அபார வெற்றி
09 Aug 2025மகளிருக்கான ஆசிய கோப்பை யு-20 கால்பந்து போட்டியில் இந்திய அணி துர்க்மேனிஷ்தானை 7-0 என வீழ்த்தி அசத்தியது.
-
பீகார் துணை முதல்வர் பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை : தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
10 Aug 2025பாட்னா : பீகார் மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு
10 Aug 2025ராமநாதபுரம் : தமிழக மீனவர்களை சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
-
தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
10 Aug 2025ராஜபாளையம் : தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் தேர்தல் முறைகேடு: விசாரிக்க சித்தராமையா உத்தரவு
10 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் தேர்தல் முறைகேட்டை விசாரிக்க சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Aug 2025டெல்லி : அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
-
பெங்களூருவில் வந்தே பாரத் ரயில், மெட்ரோ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
10 Aug 2025பெங்களூரு : பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
10 Aug 2025சென்னை, : அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை என்பது கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய ஓ.பி.எஸ்.க்கு பா.ஜ.க. அழைப்பு
10 Aug 2025சென்னை : பா.ஜ.க. அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
3-ம் கட்ட சுற்றுப்பயணம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார் இ.பி.எஸ்.
10 Aug 2025கிருஷ்ணகிரி : எடப்பாடி பழனிசாமி தனது 3-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார்.
-
மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம் : புதிய திட்டத்துக்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல்
10 Aug 2025புதுடில்லி : 2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.
-
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி கோரிக்கை
10 Aug 2025புதுடில்லி : தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் வலியு