எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர். இந்த தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- கடைசி நாளில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அது நம்ப முடியாத முயற்சி. 186 ஓவர்கள் பந்து வீசிய பிறகும், கடைசி நாளில் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது சிராஜின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் அறிகுறியாகும் என்று பாராட்டியுள்ளார்.
_______________________________________________________________________________________________________
நியூசிலாந்து வீராங்கனை ஓய்வு
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தாம்சின் நியூட்டன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் தனது கிரிக்கெட் கெரியர் முடிவடைவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நியூட்டன் அதில் 56 ரன்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம் 15 டி20 போட்டிகளில் விளையாடி 22 ரன்களும் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடைசியா 2021-ம் ஆண்டு விளையாடிய அவருக்கு அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் அவர் தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.
_______________________________________________________________________________________________________
சிராஜ் வீட்டில் கோலி ஜெர்சி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். சிராஜ்- விராட் கோலி சகோதர்கள் போன்று பழகி வருகிறார்கள். கடந்து 2018-ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐ.பி.எல். தொடராக இருந்தது.x அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.
எனவே முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனை களை தான் சிராஜ் கையாள்கிறார். விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜெர்சி 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. அணியில்...? சஞ்சு பதில்
ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி 7,629 ரன்கள் குவித்துள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார். சமீபத்தில் இவர் சி.எஸ்.கே. அணியில் இணைவதாக சமூக வலைதளங்களில் பேச்சு அதிகரித்தது. தோனிக்கும் முட்டி வலி, வயது காரணமாக அடுத்த சீசனில் விளையாடுவாரா எனத் தெரியவில்லை.
இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் நேர்காணலில் சஞ்சு சாம்சனிடன், “நான் கேரளாவுக்கு வந்துவிடுகிறேன். நீ தமிழ்நாட்டுக்கு மாறிவிடுகிறாயா?” எனக் கேட்டார். நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்த சாம்சன் , “அண்ணா, அதெல்லாம் என் கையில் இல்லை. நடந்தால் பார்ப்போம்” எனக் கூறிவிட்டார். டிசம்பரில் ஐ.பி.எல். மினி ஏலம் நடைபெறுவதால் அதில் சாம்சனை சி.எஸ்.கே. அணி வாங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
_______________________________________________________________________________________________________
பும்ராவுக்கு பயிற்சியாளர் ஆதரவு
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது அவருக்கு எதிராக விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் பும்ராவின் உடற்தகுதி தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “பும்ராவுக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு முதுகில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, மேலும் அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருக்கிறார் என்பது போல் இல்லை. மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய உடல் எதற்கு ஒத்துழைக்கிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் செயல்படுகிறார். எனவே அவரது உடற்தகுதியையும், காயத்தையும் குறித்து தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது என்று கூறினார்.
_______________________________________________________________________________________________________
இந்திய மகளிர் அணி தகுதி
ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது. இதில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
இந்த சூழலில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் நேற்று விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார். இந்திய அணி கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
சிராஜுக்கு ராக்கி கட்டிய நடிகை
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிகெக்ட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளானது. ஒருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாய் போஸ்லே முகமது சிராஜுக்கு ராக்கி கயிறு கட்டி விட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் விவகாரம்: இந்தியாவுக்கு பிலாவல் பூட்டோ மிரட்டல்
12 Aug 2025இஸ்லாமாபாத் : சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்தால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு சுற்று போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் : தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்
12 Aug 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி : இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி என பெருமிதம்
12 Aug 2025சென்னை : 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர்
-
'கூலி' பட சிறப்புக்காட்சிக்கு அனுமதி
12 Aug 2025சென்னை : 'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
-
வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
12 Aug 2025புதுடெல்லி : பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஆசிய கோப்பை தொடர்: இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இல்லை?
12 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவிப்பு
12 Aug 2025நியூயார்க் : பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
-
வரும் 7-ம் தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும்
12 Aug 2025சென்னை : வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
-
ஆதார் சரியான குடியுரிமை அடையாள ஆவணம் அல்ல : தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது சுப்ரீம் கோர்ட்.
12 Aug 2025புதுதில்லி : ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-08-2025.
12 Aug 2025 -
அ.தி.மு.க. சார்பில் ஆவடியில் வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
12 Aug 2025சென்னை : ஆவடியில் வருகிற 22-ம் தேதி தி.மு.க. அரசை கண்டிதது அ.தி.மு.க. சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர்: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுலுக்கு பெருகும் ஆதரவு
12 Aug 2025டெல்லி : வாக்கு திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
-
புதுச்சேரியில் எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை: முதல்வர் அறிவிப்பு
12 Aug 2025புதுச்சேரி : எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிப்போருக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்போருக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகையாக தரப்படவுள்ளது என்
-
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? - அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
12 Aug 2025திருச்சி : சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
துணை முதல்வர் உதயநிதியுடன் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சந்திப்பு
12 Aug 2025சென்னை : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சந்தித்து பேசினார்.
-
தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் : அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை
12 Aug 2025சென்னை : தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, தூய்மை பணியாளர்களின் போராட்டம் விரைவில் முடிவு
-
மதுரையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் த.வெ.க. மாநில மாநாடு: ஏற்பாடு பணிகள் தீவிரம்
12 Aug 2025மதுரை : மதுரையில் தமிழக வெற்றிக்கழக மாநில மாநாடு பணிகள் தீவிரமா நடைபெற்று வருகிறது.
-
13-வது மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்: மிதாலி ராஜ்
12 Aug 2025மும்பை : இந்தியாவில் நடைபெறவுள்ள 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய மகளிரணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை கிண்டலடிப்பதா? - பார்லி.யில் இலங்கை எம்.பி. ஆதங்கம்
12 Aug 2025இலங்கை : இந்தியாவை கிண்டலடிப்பதா என இலங்கை எம்.பி. சில்வா பாராளுமன்றததில் கோள்வி எழுப்பியுள்ளார்.
-
லிங்கேஷ் அனுமோள் இணையும் காயல்
12 Aug 2025ஜெ ஸ்டுடியோ ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோள், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல்.
-
ஹர்மன்ப்ரீத் கவுர் நம்பிக்கை
12 Aug 202513வது மகளிர் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ஐ.சி.சி.
-
குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Aug 2025சென்னை : குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு குறித்து காவல் துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சொட்ட சொட்ட நனையுது இசை வெளியீட்டு விழா
12 Aug 2025அட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ’சொட்ட சொட்ட நனையுது’.
-
வரி விதிப்பு விவகாரத்தில் சலுகை: சீனா மீதான வரிவிதிப்பு 90 நாட்கள் நிறுத்திவைப்பு : அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவு
12 Aug 2025வாஷிங்டன் : சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் அறிக்கை: காலக்கெடுவை நீட்டித்தது மக்களவை
12 Aug 2025புதுடெல்லி : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்த பாராளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.