எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர். இந்த தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- கடைசி நாளில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அது நம்ப முடியாத முயற்சி. 186 ஓவர்கள் பந்து வீசிய பிறகும், கடைசி நாளில் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது சிராஜின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் அறிகுறியாகும் என்று பாராட்டியுள்ளார்.
_______________________________________________________________________________________________________
நியூசிலாந்து வீராங்கனை ஓய்வு
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தாம்சின் நியூட்டன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் தனது கிரிக்கெட் கெரியர் முடிவடைவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நியூட்டன் அதில் 56 ரன்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம் 15 டி20 போட்டிகளில் விளையாடி 22 ரன்களும் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடைசியா 2021-ம் ஆண்டு விளையாடிய அவருக்கு அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் அவர் தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.
_______________________________________________________________________________________________________
சிராஜ் வீட்டில் கோலி ஜெர்சி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். சிராஜ்- விராட் கோலி சகோதர்கள் போன்று பழகி வருகிறார்கள். கடந்து 2018-ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐ.பி.எல். தொடராக இருந்தது.x அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.
எனவே முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனை களை தான் சிராஜ் கையாள்கிறார். விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜெர்சி 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. அணியில்...? சஞ்சு பதில்
ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி 7,629 ரன்கள் குவித்துள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார். சமீபத்தில் இவர் சி.எஸ்.கே. அணியில் இணைவதாக சமூக வலைதளங்களில் பேச்சு அதிகரித்தது. தோனிக்கும் முட்டி வலி, வயது காரணமாக அடுத்த சீசனில் விளையாடுவாரா எனத் தெரியவில்லை.
இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் நேர்காணலில் சஞ்சு சாம்சனிடன், “நான் கேரளாவுக்கு வந்துவிடுகிறேன். நீ தமிழ்நாட்டுக்கு மாறிவிடுகிறாயா?” எனக் கேட்டார். நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்த சாம்சன் , “அண்ணா, அதெல்லாம் என் கையில் இல்லை. நடந்தால் பார்ப்போம்” எனக் கூறிவிட்டார். டிசம்பரில் ஐ.பி.எல். மினி ஏலம் நடைபெறுவதால் அதில் சாம்சனை சி.எஸ்.கே. அணி வாங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
_______________________________________________________________________________________________________
பும்ராவுக்கு பயிற்சியாளர் ஆதரவு
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது அவருக்கு எதிராக விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் பும்ராவின் உடற்தகுதி தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “பும்ராவுக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு முதுகில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, மேலும் அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருக்கிறார் என்பது போல் இல்லை. மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய உடல் எதற்கு ஒத்துழைக்கிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் செயல்படுகிறார். எனவே அவரது உடற்தகுதியையும், காயத்தையும் குறித்து தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது என்று கூறினார்.
_______________________________________________________________________________________________________
இந்திய மகளிர் அணி தகுதி
ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது. இதில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
இந்த சூழலில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் நேற்று விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார். இந்திய அணி கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
சிராஜுக்கு ராக்கி கட்டிய நடிகை
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிகெக்ட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளானது. ஒருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாய் போஸ்லே முகமது சிராஜுக்கு ராக்கி கயிறு கட்டி விட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? த.வெ.க. ஆனந்தை கடுமையாக எச்சரித்த புதுவை பெண் எஸ்.பி.
09 Dec 2025சென்னை, கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தை புதுச்சேரி பெண் எஸ்.பி. கடுமையாக எச்சரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம்
09 Dec 2025சென்னை, தி.மு.க. அரசை கண்டித்து சென்னை தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
-
சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
09 Dec 2025சென்னை, சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ விமான சேவைகளை குறைக்க விமான போக்குவரத்து துறை அதிரடியாக உத்தவிட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது தமிழக அரசு சார்பில் வாதம்
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பான விசாரணையின் போது கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
-
புதுச்சேரியில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கியுள்ளது: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
09 Dec 2025சென்னை, புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் பதிவு செய்துள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச்சு: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யில் ஆளும் கட்சியினர் அமளி
09 Dec 2025டெல்லி, மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கிய நிலையில் அமளி ஏற்பட்டது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
09 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து
09 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (டிச. 9) சவரனுக்கு ரூ. 320 குறைந்து விற்பனையானது.
-
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
09 Dec 2025டெல்லி, வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலையில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பீகார் மாநில தேர்தல் வெற்றி: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு
09 Dec 2025டெல்லி, டெல்லியில் நடந்த தே.ஜ. கூட்டணி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
-
தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்: பிரம்மாண்ட கூட்டத்தில் விஜய் பேச்சு
09 Dec 2025புதுச்சேரி, புதுவையை பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் கற்றுக்கொள்ளாது என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார். மேலும் நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
-
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
09 Dec 2025திருவனந்தபுரம், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.
-
புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
09 Dec 2025சென்னை, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
-
அண்ணாமலையை சந்தித்தது ஏன்..? அ.ம.மு.க. டி.டி.வி.தினகரன் விளக்கம்
09 Dec 2025சென்னை, அண்ணாமலையை சந்தித்தது குறிதது டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
-
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்
09 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார்.
-
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Dec 2025சென்னை, சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு இணையதளத்தில் வக்பு சொத்துகள் பதிவேற்றம்
09 Dec 2025புதுடெல்லி, மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
79-வது பிறந்தநாளை முன்னிட்டு காங். தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
09 Dec 2025டெல்லி, 79-வது பிறந்தநாளை முன்னிட்ட சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம்: புஸ்சி ஆனந்த் பேச்சு
09 Dec 2025புதுவை, புதுச்சேரியில் கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம் என்றும் மேலும், வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் தலைவருக்காகதான் என்றும் புஸ்
-
புதுவை: விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்...!
09 Dec 2025புதுவை, புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிவகங்கையை சேர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


