எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை, தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிற்ப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது.
தொழில் முதலீடுகளை...
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்து உள்ளார். இதன் மூலம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதில் 30 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
அமைச்சரவை கூட்டம்...
இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டுக்கான புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
6 திட்டங்கள்....
நம்முடைய முதல்வர் இன்றைக்கு (நேற்று) தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நல வாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக் கூடிய நலன்கள் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தருவதற்கு இந்த அரசு முனைப்புடன் உள்ளது.
திட்டங்களுக்கு ஒப்புதல்...
நமது முதல்வர் கலைஞர் காலத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வரும் திட்டங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதுடன் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் நலனிலும் முதலமைச்சரின் அரசு பெரும் கருணைக் கொண்டதாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து நேற்று அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் காப்பீடு...
தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.
கல்வி உதவித்தொகை....
தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும். 6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும். அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
கலைஞர் கனவு இல்லம்....
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும். தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். எனவே தூய்மை பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும். அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் முடிவடைந்த பிறகு பரிசீலிக்கப்படும். அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் அறிவிப்புகள்:
1) தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
2) பணியின் போது மரணம் அடைந்தால்10 லட்சம் ரூபாய் நிவாரணம்.
3) சுய தொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.
4) தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம்.
5) நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள்.
6) தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் .
7) தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் கட்டணமின்றி வழங்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-08-2025.
14 Aug 2025 -
இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது: த.வெ.க. மாநாடு பணிகள் மும்முரம்
14 Aug 2025மதுரை: த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
14 Aug 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
ரசிகர் கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: கன்னட நடிகர் தர்ஷன் கைது
14 Aug 2025பெங்களூரு: நடிகை பவித்ரா கவுடாவை சீண்டிய ரசிகரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
-
சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுவிப்பு
14 Aug 2025சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம்: தேர்தல் ஆணையம்
14 Aug 2025புதுடெல்லி, வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
14 Aug 2025புதுடெல்லி: ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
-
தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணங்கள் உயர்வு
14 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது.
-
சாலைகள் சீரமைக்கப்படும்: ஏலகிரி மலைவாழ் மக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
14 Aug 2025ஏலகிரி: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
-
பாக்., ராணுவத்தில் புதிய படை
14 Aug 2025லாகூர், பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் நேற்று (ஆக.14) கொண்டாடப்பட்டது.
-
வாக்குத்திருட்டு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
14 Aug 2025டெல்லி, வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
வட மாநிலங்களில் கனமழை
14 Aug 2025புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
-
நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை பிரதமர் நரேந்திர மோடி பதிவு
14 Aug 2025புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை: தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
14 Aug 2025சென்னை: காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை, தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிற்ப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதல்வர் ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
-
இன்று 79-வது சுதந்திரதின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்
14 Aug 2025சென்னை: சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.;
-
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிடுங்கள் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
14 Aug 2025புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் இணைய
-
தூய்மைப் பணியாளர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
14 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
-
அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம் அதிருப்தி
14 Aug 2025புது தில்லி, அரசியல் சண்டைகளுக்கு நடுவே நாங்கள் மாட்டிக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாக். பிரிவினை காயம் ஆறவில்லை: தமிழ்நாடு கவர்னர்
14 Aug 2025சென்னை, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
-
உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு இது: தூய்மை பணியாளர்கள் மாண்பை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Aug 2025சென்னை: என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என தெரவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் உறுதி
-
அவர்கள் தேச விரோதிகளா? தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில் விஜய் ஆவேசம்
14 Aug 2025சென்னை, அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
-
8 தமிழக மீனவர்களுக்கு அபராதம், 16 பேருக்கு மேலும் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
14 Aug 2025ராமேசுவரம், சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம
-
வார்னருக்கு ஜோ ரூட் பதிலடி
14 Aug 2025ஆஷஸ் தொடருக்காக டேவிட் வார்னரின் விமர்சனத்துக்கு ஜோ ரூட் “இதெல்லம் புதியதா என்ன? இன்னும் 100 நாள்கள் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.