எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை: 17 வயதில் நேற்று இதே நாளில் சச்சின் முதல் டெஸ்ட் சதம் அடித்து விளாசினார்.
ஓல்ட் டிராபர்டில்...
மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், லெஜண்ட், ஜீனியஸ் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த லட்சிய கிரிக்கெட் ஆளுமையான சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சதத்தை ஓல்ட் டிராபர்டில் அடித்த நாள் இதுதான். 1990-ம் ஆண்டில் இதே நாளில் (நேற்று - ஆக.14) தனது 17 வயதில் சச்சின் டெண்டுல்கர் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு டெஸ்ட் போட்டியை டிரா செய்தார்.
பாக்.கிற்கு எதிராக....
பாகிஸ்தானில் 1989-ம் ஆண்டு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுக இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த இன்னிங்சில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் மூக்கில் அடிப்பட்டு பிளாஸ்திரி போட்டுக் கொண்டு வந்து இரண்டு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் பவுண்டரிகளை அடித்தவர்.
தோல்வியுறாமல் டிரா....
அந்த பாகிஸ்தான் தொடரிலேயே பைசலாபாத்தில் 2-வது டெஸ்ட்டில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். லாகூரில் 41 ரன்களையும், சியால்கோட் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 35 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 57 ரன்களையும் எடுத்து கடினமான அந்தத் தொடரில் இந்தியா தோல்வியுறாமல் டிரா செய்து விட்டு வந்தனர். அந்தத் தொடரிலிருந்து சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் வளரும் நாயகன், வளரும் நட்சத்திரம் என்று ஊடக உலகில் வளைய வரத் தொடங்கியது.
ரசிகர்கள் ஆர்வம்....
பிறகு நியூஸிலாந்து தொடரில் நேப்பியரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 88 ரன்களை எடுத்தார் சச்சின், சதம் அடிப்பார் என்று ஆவலாக எதிர்பார்த்த தருணத்தில் டேனி மாரிசன் பந்தில் பின்னாளைய இந்தியப் பயிற்சியாளர் ஜான் ரைட் கேட்ச் எடுக்க ஆட்டமிழந்தார். அது அவருக்கே பெருத்த ஏமாற்றமளித்தது. இந்நிலையில்தான் 1990-ல் இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்றபோது லார்ட்ஸ் டெஸ்ட்டில் 10,27 எடுத்து 2-வது டெஸ்ட்டிற்கு இந்திய அணி ஓல்ட்டிராபர்டுக்கு வருகிறது. இந்தத் தொடரில் பெரிய கவர்ச்சியே சச்சின் டெண்டுல்கர்தான். சச்சின் டெண்டுல்கர் என்னும் 17 வயது சிறுவனின் ஆட்டத்தைப் பார்க்க இந்திய, பாகிஸ்தானிய, இங்கிலாந்து ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிய தொடர்.
இரண்டரை மணி நேரம்....
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கூச் (116), மைக் ஆர்த்தர்டன் (131), ராபின் ஸ்மித் (121) சதங்களுடன் 519 ரன்கள் குவித்தது. இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் சஞ்சய் மஞ்சுரேக்கர் (93), அசாருதீன் (179), எடுக்க, சச்சின் டெண்டுல்கர் 68 ரன்களை எடுக்க, இந்திய அணி 432 ரன்களை எடுத்தது. 2-வது இன்னிங்சில் ஆலன் லாம்ப் 109 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 320/4 என்று டிக்ளேர் செய்தது. இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 408 ரன்கள். இலக்கை விரட்டும் போது இந்திய அணி 127/5 என்றும், பிறகு கபில்தேவ் 26 ரன்களில் அவுட் ஆனபோது 183/6 என்றும் தோல்வி முகம் காட்டிய போது சச்சின் டெண்டுல்கரும் மனோஜ் பிரபாகரும் கடைசி இரண்டரை மணி நேரம் தாக்குப் பிடித்து 160 ரன்களைச் சேர்த்தனர்.
ஆஸ்திரேலியாவில்...
பிரபாகர் 67 ரன்களை எடுக்க, சச்சின் டெண்டுல்கர் 119 ரன்களை 17 பவுண்டரிகளுடன் விளாசினார் இருவருமே நாட் அவுட் ஆக இந்திய அணி 343/6 என்று ஆட்டம் முடிந்தது. டிரா ஆனது. ஒருவேளை இங்கிலாந்து முதல் நாளே டிக்ளேர் செய்திருந்தால் இந்திய அணியை சச்சின் வெற்றி பெறக்கூடச் செய்திருக்கலாம். ஏனெனில் 65 ரன்கள்தான் தேவை என்ற நிலை. அன்று தன் முதல் சதத்தை அடித்தவர்தான் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் சிட்னியில் 147, அதிவேக பவுன்ஸ் பிட்சில் 114 என்று வெளுத்து வாங்கிய பிறகே முதல் 15 டெஸ்ட் போட்டிகள் கடினமான பிட்ச்களில் வெளிநாட்டில் ஆடி விட்டுத்தான் இந்தியாவிலேயே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் டெஸ்ட்டை ஆடினார் என்பதும் சத சதங்கள் எடுத்த சதநாயகன் ஆக நேற்று வரலாற்றில் இடம்பிடித்த நாள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-08-2025.
14 Aug 2025 -
இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது: த.வெ.க. மாநாடு பணிகள் மும்முரம்
14 Aug 2025மதுரை: த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
14 Aug 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
ரசிகர் கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: கன்னட நடிகர் தர்ஷன் கைது
14 Aug 2025பெங்களூரு: நடிகை பவித்ரா கவுடாவை சீண்டிய ரசிகரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
-
சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுவிப்பு
14 Aug 2025சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
14 Aug 2025புதுடெல்லி: ஆதாரை அடையாள ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம்: தேர்தல் ஆணையம்
14 Aug 2025புதுடெல்லி, வாக்காளர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
-
சாலைகள் சீரமைக்கப்படும்: ஏலகிரி மலைவாழ் மக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
14 Aug 2025ஏலகிரி: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஏலகிரியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
-
தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணங்கள் உயர்வு
14 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது.
-
வட மாநிலங்களில் கனமழை
14 Aug 2025புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
-
வாக்குத்திருட்டு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
14 Aug 2025டெல்லி, வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
பாக்., ராணுவத்தில் புதிய படை
14 Aug 2025லாகூர், பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் நேற்று (ஆக.14) கொண்டாடப்பட்டது.
-
நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை பிரதமர் நரேந்திர மோடி பதிவு
14 Aug 2025புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை: தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
14 Aug 2025சென்னை: காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை, தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிற்ப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிடுங்கள் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
14 Aug 2025புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் இணைய
-
இன்று 79-வது சுதந்திரதின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்
14 Aug 2025சென்னை: சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.;
-
தூய்மைப் பணியாளர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
14 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
-
அரசியல் சண்டைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறோம்: தேர்தல் ஆணையம் அதிருப்தி
14 Aug 2025புது தில்லி, அரசியல் சண்டைகளுக்கு நடுவே நாங்கள் மாட்டிக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதல்வர் ஸ்டாலின்
14 Aug 2025சென்னை: தமிழக கவர்னரில் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
-
உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு இது: தூய்மை பணியாளர்கள் மாண்பை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Aug 2025சென்னை: என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என தெரவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் உறுதி
-
இந்தியா - பாக். பிரிவினை காயம் ஆறவில்லை: தமிழ்நாடு கவர்னர்
14 Aug 2025சென்னை, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
-
அவர்கள் தேச விரோதிகளா? தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில் விஜய் ஆவேசம்
14 Aug 2025சென்னை, அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
-
வார்னருக்கு ஜோ ரூட் பதிலடி
14 Aug 2025ஆஷஸ் தொடருக்காக டேவிட் வார்னரின் விமர்சனத்துக்கு ஜோ ரூட் “இதெல்லம் புதியதா என்ன? இன்னும் 100 நாள்கள் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
-
பீகார், உ.பி., இ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் எச்சரிக்கை
14 Aug 2025புதுடெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.