முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார், உ.பி., இ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை: டெல்லிக்கு ஆர்ஞ்ச் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rain-Delhi-2025-08-14

புதுடெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

டெல்லியில் கனமழை: 

டெல்லியில் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. டெல்லி-என்சிஆர், லஜ்பத் நகர், ஆர்கே புரம், லோதி சாலை, டெல்லி-ஹரியானா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பகலில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்றும், பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உத்தரப்பிரதேசம்: 

உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, தலைநகர் லக்னோ உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசம்:

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. “இமாச்சலப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 396 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. உயிர் இழப்பு எதுவும் பதிவாகவில்லை” என்று இமாச்சல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார்:

 

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் நிதிஷ் குமார் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். "பெருமழை காரணமாக பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கங்கை, கோசி, பாக்மதி, புர்ஹி கண்டக், புன்புன் மற்றும் காகாரா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில், இந்த ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன. போஜ்பூர், பாட்னா, சரண், வைஷாலி, பெகுசராய், லக்கிசராய், முங்கர், ககாரியா, பாகல்பூர் உட்பட 10 மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து