எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து, ‘தகைசால் தமிழர்’ விருது கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவித்தார்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில், தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் 5-வது முறையாக ஏற்றி வைத்தார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை 8.48 மணிக்கு கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். அதன் பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் லெப்டின்ட் ஜெனரல் ஶ்ரீ ஹரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், ஏர் கமாண்டர் தபன் சர்மா, கடலோர காவல் படை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் முருகன், தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட் சன் தேவாசீர்வாதம், சென்னை காவல்துறை ஆணையர் அருண் ஆகியோரை தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து, தமிழக காவல்துறை மற்றும் கேரள காவல்துறையினர் நடத்திய அணி வகுப்பு மரியாதையை திறந்த வெளி ஜீப்பில் முதல்வர் பார்வையிட்டார். அதன் பிறகு, கோட்டையில், தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார். இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான "தகைசால் தமிழர் விருது" பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கும் , டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் நாராயணனுக் கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது செல்வி.துளசிமதி முருகேசனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
இதுபோல, முதலமைச்சரின் நல்ல ஆளுமை விருது சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தை கொண்டு வரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகள் பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
கட்டிட வரைப்பட அனுமதிகளை எளிதாக்கி பிரிவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்கம் இயக்குநர் கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை நலத் திட்டங்களை செயல்படுத்தியது பிரிவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, ஆதி திராவிடர் நல ஆணையர் ஆனந்த், பழங்குடியில் நலத்துறை புகைப்பட அண்ணாதுரை, தாட்கோ இயக்குனர் கந்தசாமி ஆகியோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது (குழு) வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை இணைக்கும் கண்ணாடி பலம் அமைத்ததற்காக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் மொழியை உலக அளவில் மேம்பட முயற்சியை எடுத்த தமிழ் இணைய கல்வி கழகத்தின் இணை இயக்குநர் கோமகன் ஆகியோருக்கு நல் ஆளுமை விருதை (அமைப்பு) முதல்வர் வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் விருது திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் குமரவேல் சண்முக சுந்தரமுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனமான எக்காம் வெல் மாற்றுத் திறனாளிக்கான மறுவாழ்வு மையத்துக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர் கோவையைச் சேர்ந்த குணசேகரன் ஜெகதீசனுக்கும், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பணி அமைத்திய நிறுவனமாக பெல் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு விருதை முதல்வர் வழங்கினர்.
சமூக நலத்திற்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகள் பிரிவில், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது சென்னையைச் சேர்ந்த பாகீரதி ராமமூர்த்தி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோருக்கும், மகளிர் நல்லதாக பணியாற்ற சிறந்த தொண்டு நிறுவனமான கருணாலய சமூக சேவை நிறுவனம் ( சென்னை), சொசைட்டி ஃபார் எஜுகேசன் வில்லேஜ் ஆக்சன் மற்றும் இம்ப்ரூவ்மெண்ட் (திருச்சி) நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் பிரிவில், சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலமாக முதல் பரிசு 6-வது மண்டலத்துக்கும், இரண்டாவது பரிசாக 13-வது மண்டலத்துக்கும், சிறந்த மாநகராட்சி பிரிவி் முதல் பரிசு ஆவடி மாநகராட்சிக்கு, இரண்டாவது இடம் நாமக்கல் மாநகராட்சிக்கும், சிறந்த நகராட்சியாக முதல் பரிசு ராஜபாளையம் நகராட்சிக்கும், இரண்டாவது பரிசாக ராமேஸ்வரம் நகராட்சிக்கும், மூன்றாவது பரிசாக பெரம்பலூர் நகராட்சிக்கும், சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசு உத்திரமேரூர் பேரூராட்சிக்கும், இரண்டாவது பரிசு காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கும், மூன்றாம் பரிசு நத்தம் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.
அதேபோல் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளில் ஆண்கள் பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்துரு குமார், திருநெல்வேலி சேர்ந்தச் ஜெயக்குமார், சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன், பெண்கள் பிரிவில் சென்னை சேர்ந்த காஜிமா, புதுக்கோட்டையை சேர்ந்த லாவண்யா, கிருஷ்ணகிரி சேர்ந்த கௌரி ஆகியோருக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.
இதன் பின்னர் தகைச்சால் தமிழர் விருத்தாளர் காதர் மொகிதீன் மற்றும் விருதுப் பெற்றவர்களுடன் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், விருதாளர்களுடன் குழுப்புகைப்படமும் முதல்வர் எடுத்துக் கொண்டார். முன்னதாக, முதல்வர் ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சி இறுதியாக, ஆளுநர் நுழைவாயில் முகப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை ஏற்க மாட்டோம்: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து
15 Aug 2025பெரம்பலூர், தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை வி.சி.க. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
15 Aug 2025புதுடெல்லி, 79-வது சுதந்திர தின விழாவினை ஒட்டி பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
-
முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி
15 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைக
-
79-வது சுதந்திர தின விழா: காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: முதல்வர் மு.கஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.
-
சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்
15 Aug 2025சென்னை, நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாது
-
விடுதலை போராட்ட தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
15 Aug 2025சென்னை, விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ
-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மாற்றம்: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு: மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும்
15 Aug 2025புதுடெல்லி, தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
-
79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை
15 Aug 2025புதுடெல்லி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
15 Aug 2025சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையில் இருந்த
-
79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து
15 Aug 2025மாஸ்கோ, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
15 Aug 2025புதுடெல்லி, “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
-
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Aug 2025சென்னை, ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வு
15 Aug 2025ஜப்பான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்புக்கு மத்தியில் ஜப்பான் பொருளாதாரம் உயர்வை கண்டுள்ளது.
-
புதுச்சேரியில் தியாகிகள் உதவித்தொகை உயர்வு: கவர்னர் கைலாஷ்நாதன் அறிவிப்பு
15 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட
-
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
15 Aug 2025தென்காசி, குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
15 Aug 2025சென்னை, நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
-
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
15 Aug 2025திருச்செந்தூர், திருச்செந்தூரில் விடுமுறை தினமான நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
நடிகர் விஜய் சுதந்திரதின வாழ்த்து
15 Aug 2025சென்னை, சுதந்திர தினத்தையொட்டி நடிகர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் தேநீர் விருந்து: அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
15 Aug 2025சென்னை, கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
-
காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
15 Aug 2025டெல்அவிவ், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
-
தவறான கருத்துகளை பரப்பினால்... பாக்.கிற்கு இந்தியா கடும் எச்சரிக்கை
15 Aug 2025புதுடெல்லி, பாகிஸ்தான் இந்தியா குறித்து தவறான கருத்துகளை பரப்பினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளா
-
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்: வாழ்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்
15 Aug 2025சென்னை, 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்திற்காக தன்னை வாழ்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
-
உக்ரைன் போரை நிறுத்தும் அதிபர் ட்ரம்பின் உண்மையான முயற்சிக்கு பாராட்டுகள்: புதின்
15 Aug 2025லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான போரை
-
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்
15 Aug 2025மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சுங்கசாவடியில் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000-க்கு பாஸ் வழங்கும் திட்டம் அமலானது
15 Aug 2025புதுடெல்லி, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது.