எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சுற்றுலா, புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது; அறிவு வளர்ச்சிக்கும், ஆற்றலின் பெருக்கத்திற்கும் துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் இன்று சுற்றுலாத்துறை பெரிய காரணியாக விளங்குகிறது. உலக அளவில் நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதிலும், மனித நாகரிகத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
உலகம் - இந்தியா - மாநில அளவில் சுற்றுலா வளர்ச்சி: 2024 ம் ஆண்டில், உலக அளவில் ஏறத்தாழ 1.4 பில்லியன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டினை விட 11 சதவீதம் அதிகமாகும். இந்திய அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022 ல் 8.15 மில்லியன் 2023 ல் 19.25 மில்லியன்; இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022 இல் 1731 மில்லியன் என்பது, 2023 இல் 2510 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இதே போல, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022 இல் 0.14 மில்லியன்; 2023 இல் இது 1.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதே போல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022 இல் 218.58 மில்லியன் என்பது, 2023 இல் 286 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்தப்புள்ளி விவரங்கள் எல்லாம் மக்கள் இடையே சுற்றுலா குறித்து வளர்ந்துள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் சுற்றுலா வளம்: தமிழ்நாடு இயற்கை எழில் குலுங்கும் காட்சிகளை அதிகம் கொண்டுள்ளது. பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. உலகில் இரண்டாவது மிக நீளமான நகர்புற கடற்கரை தமிழ்நாட்டில் உண்டு. இந்தியாவின் மொத்த கடற்கரையில் இது 13 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும்.
மலைகளின் இளவரசி எனப் புகழப்படும் உதகமண்டலம், ஏலகிரி, கொல்லி மலை, ஏற்காடு முதலான பல மலைவளக் காட்சிகளும், குற்றாலம், பாபநாசம் திற்பரப்பு முதலிய பல நீர்வீழ்ச்சிகளும், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் கடற்கரை கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், சிதம்பரம் நடராசர் பெருங்கோயில், திருவரங்கம் அரங்கநாதன் திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகள் முதலிய பல தெய்வீகச் சுற்றுலா மையங்களும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முதுமலை வனவிலங்கு சரணாலயம், கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் முதலிய பல சரணாலயங்களும் அமைந்து சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கின்றன.
தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்: ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு சுற்றுலா தினத்தையொட்டி மாமல்லபுரம், தஞ்சாவூர், இராமேஸ்வரம், மதுரை, செட்டிநாடு ஆகிய இடங்களுக்கு தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம் எனும் சிறப்புச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டின் முக்கிய விழாக்கள்: மதுரை சித்திரைத் திருவிழா, ஏற்காடு, கொடைக்கானல், ஜவ்வாது மலை முதலிய இடங்களில் கோடைவிழா, குற்றாலம், சுருளி அருவி முதலிய இடங்களில் சாரல் விழா, கொல்லி மலையில் வல்வில் ஓரி திருவிழா, பொங்கல் விழா முதலான பல்வேறு விழாக்கள் ஆண்டு தோறும் நடைபெற்று உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்கின்றன.
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரை மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற "இந்திய நாட்டிய விழா" நடத்தப்படுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்திய நாட்டிய விழாவில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமிருந்து வருகை புரியும் நடனக்கலைஞர்கள், செழுமையான பலதரப்பட்ட இந்திய நாட்டிய கலைகளை வழங்குகிறார்கள்.
அற்புதமான இந்திய நாட்டிய விழா கொண்டாட்டத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகிறார்கள். இத்துடன், திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா, சர்வதேச காத்தாடி திருவிழா முதலிய விழாக்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
4000 கிலோ மீட்டர் நீள இரயில் பாதை வசதிகள், சாலை வசதிகள், சென்னை தூத்துக்குடி, எண்ணூர், நாகை ஆகிய முக்கிய துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்கள் விரைவான விமானப் போக்குவரத்துக்கு உதவும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் சேலம், தூத்துக்குடி முதலிய உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவை சுற்றுலாத் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.
சுற்றுலா கிராம விருதுகள்: நீலகிரி மாவட்டம் உல்லாடா, கோவை மாவட்டம் வேட்டைக்காரன்புதூர் ஆகிய கிராமங்களுக்குச் சிறந்த சுற்றுலா கிராமங்கள் எனும் விருது புதுடில்லியில் 27.9.2023 அன்று வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலா கிராமங்கள் விருது கீழடி கிராமம், நாமக்கல் மாவட்டம் மேல்கலிங்கம்பட்டி கிராமம் ஆகிய கிராமங்களுக்கு 27.9.2024 அன்று ஒன்றிய சுற்றுலா அமைச்சகத்தால் புது டெல்லியில் வழங்கப்பட்டன.
மருத்துவச் சுற்றுலா மாநாடு 2025: முதல்வர் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டின், 'மருத்துவச் சுற்றுலா மாநாடு 2025' சென்னையில் 4.4.2025, 5.4.2025 ஆகிய இரண்டு நாள்கள் திராவிட மாடல் ஆட்சியின் சுற்றுலாத்துறை சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பாக நடத்திப் பாராட்டுகளைப் பெற்றது.
தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை - 2023: முதல்வர் ஸ்டாலின் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்திடவும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரித்திடவும், அந்நியச் செலாவணியை ஈர்க்கும் வகையிலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கேற்ற வசதிகளையும், கட்டமைப்புகளையும் அதிகப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக, தமிழ்நாடு அரசின் சுற்றுலாக் கொள்கை - 2023 யை உருவாக்கி 26.9.2023 அன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் பல சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சாதனை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பெறும் 26 ஓட்டல்கள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் ஆன்லைனில் பதிவு செய்யும் சேவைகள் காரணமாகவும் 2021 மே முதல் 2025 ஜனவரி வரை ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தருமபுரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்
16 Aug 2025தருமபுரி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
-
சேலம் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
16 Aug 2025சேலம் : சேலம் நகரில் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
-
இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
16 Aug 2025நாகாலாந்து, நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேற்று (ஆகஸ்ட் 16) முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும
-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்
16 Aug 2025புதுடெல்லி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்.
-
உடல்நலக்குறைவால் ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலமானார்
16 Aug 2025டேராடூன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்சிலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்தாஸ் சோரன்.
-
தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை
16 Aug 2025விழுப்புரம் : பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நாளை (ஆக. 17) நடைபெற உள்ளது.
-
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
16 Aug 2025சென்னை, வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியால் தமிழ்நாட்டுக்கு கடும் பாதிப்பு : மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Aug 2025சென்னை : இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
உலகக் கோப்பை: அமெரிக்கா தகுதி
16 Aug 202516 அணிகள் பங்கேற்கும் யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது .
-
ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது : இந்தியா கருத்து
16 Aug 2025டெல்லி : உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது என்று தெரிவித்துள் மத்திய அரசு ட்ரம்ப் - புதின் சந்திப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
-
4.9 ரிக்டர் அளவில் ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
16 Aug 2025கேன்பராக், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மும்பையில் விடிய விடிய பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி
16 Aug 2025மும்பை : விடிய விடிய பெய்த பலத்த மழையால் மும்பை அருகே உள்ள விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தது.
-
கனமழையால் வெள்ளப்பெருக்கு: பாகிஸ்தானில் 307 பேர் பலி
16 Aug 2025இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர்.&nb
-
42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை
16 Aug 2025சென்னை : 42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் நேற்றும் தகனம் செய்யப்பட்டது.
-
பேச்சுவார்த்தை சென்ற அதிபர் புதின் தலைக்கு மேல் பி-2 குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்டு வரவேற்ற அமெரிக்கா
16 Aug 2025அலாஸ்கா, அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷ்யாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
-
ஆர்.எஸ்.எஸ்.- பாரதிய ஜனதா இடையே எந்த மோதலும் இல்லை: ராம் மாதவ்
16 Aug 2025புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
-
தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோவிலில் கட்டுங்கடங்காத கூட்டம்
16 Aug 2025திருச்செந்தூர், : வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் நேற்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
-
வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் வகையில் வரிகள் விதிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
16 Aug 2025திருவண்ணாமலை : அரசுக்கு வருவாய் முக்கியம் ஆனால் வரிகள் விதிக்கும் பொழுது வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரிகளை விதிக்க வேண்டும் என்றும் இந்தியாவிலேயே வறட்சிக்
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு : தமிழ்நாடு அரசு பெருமிதம்
16 Aug 2025சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெர
-
திருவண்ணாமலையில் விவசாயிகள், வியாபாரிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Aug 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
-
கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிடுவோம்: இ.பி.எஸ்.
16 Aug 2025சென்னை : கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிடுவோம் என்று இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
16 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை; இந்திய அணியில் கில் , ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை ? என்று தகவல் வெளியாகியுள்ளது.
8 அணிகள்...
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
16 Aug 2025கீவ், போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வருகை
16 Aug 2025புதுடெல்லி, உள்துறை அமைச்சர்யும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க.
-
நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரிந்துரைப்பேன்: ஹிலாரி கிளிண்டன்
16 Aug 2025நியூயார்க், நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் த