எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : தெலுங்கானாவில் நடைபெற்ற பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானாவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, ஐதராபாத் மற்றும் காமாரெட்டி மாவட்டங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். இதில், ஐதராபாத் நகரில் ஆம்பர்பேட்டை பகுதியில், விநாயக மண்டபம் அமைக்கும்போது ஒருவர் பலியானார். பந்தலகுடா பகுதியில் சிலையை தூக்கி சென்றபோது, மின்கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர மற்றொரு சம்பவத்தில், ராமந்தப்பூரில் கடவுள் கிருஷ்ணரின் தேரை இழுத்து சென்றபோது, மின்கம்பி உரசியதில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதேபோன்று, காமாரெட்டி மாவட்டத்தின் ஆரேபள்ளி பகுதியில், விநாயகர் சிலையை தூக்கி சென்ற லட்சுமி நாராயணா (வயது 25) என்பவர் மின்கம்பி உரசியதில் பலியானார். பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மின்கம்பி உரசி 2 நாட்களில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


