எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : எஸ்.சுதாகர் ரெட்டி மறைவுக்கு தமிழ காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பணியாற்றி உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாவலராக செயல்பட்ட தோழர் எஸ். சுதாகர் ரெட்டியின் மறைவு செய்தி துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது. தமது இளமைப் பருவம் முதல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் அகில இந்திய தொழிற்சங்கம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பை வகித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலிமைப்படுத்தியவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமின்றி உலக கம்யூனிஸ்ட் பேரியக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களித்தவர். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்புற பணியாற்றி பொதுவுடமை கருத்துக்களை வலிமையோடு பறைசாற்றியவர் சுதாகர் ரெட்டி.
தொழிலாளர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களை திரட்டி உரிமைக்குரல் எழுப்பிய எஸ். சுதாகர் ரெட்டி மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


