எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெய்ஜிங் : பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மரின் மூத்த ராணுவ அதிகாரி மின் ஆங் லையிங், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் டோகாயேவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே மாநாட்டிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர். சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்த சூழலில், இன்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருந்த நாடுகள் குறித்தும் பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் முன்னிலையிலேயே பிரதமர் மோடி இந்த கருத்துகளை முன்வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது;-
“எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடிப்படையாகும். ஆனால் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது வேரறுக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் எதிரான சவாலாகும்.
எந்த நாடும், எந்த சமூகமும், எந்த குடிமகனும் அதிலிருந்து தன்னை பாதுகாப்பாக கருதிக் கொள்ள முடியாது. எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளது. கூட்டுத் தகவல் நடவடிக்கை மூலம் அல்கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது.
பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் நிதியை தடை செய்வதோடு, அதன் மூலங்களை கண்டறிந்து களையெடுத்து வருகிறோம். 4 தசாப்தங்களாக தீவிரவாத நடவடிக்கைகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதை ஏற்க முடியாது.
பயங்கரவாதத்தின் கோரமான முகத்தை பஹல்காமில் அண்மையில் இந்தியா பார்த்தது. இது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் மட்டுமல்ல, மனிதநேயத்தை நம்பும் ஒவ்வொரு நாட்டிற்கும் எதிரான வெளிப்படையான சவால். நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
01 Sep 2025 -
குற்றம் புதிது திரைவிமர்சனம்
01 Sep 2025போலீஸ் உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது மாயமாகி விடுகிறார்.
-
பாரதத்தாயின் வீர மகன்: பூலித்தேவருக்கு கவர்னர் புகழாரம்
01 Sep 2025சென்னை : பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் கூறியுள்ளார்.
-
சென்னையில் டீ, காபி விலை உயர்வு அமல்
01 Sep 2025சென்னை : சென்னை மாநகரில் டீ கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வந்தது.
-
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது
01 Sep 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர்: முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தல்
01 Sep 2025பெய்ஜிங் : ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்: தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேற்றம் : ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Sep 2025சென்னை : திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
-
மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் ரயில் பாதை: பிரதமர் செப்.13-ல் திறந்து வைக்கிறார்
01 Sep 2025ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிதாக ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.
-
கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு
01 Sep 2025சென்னை : தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த வாரம் வெளியாகும் யோலோ
01 Sep 2025MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு
01 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
தெற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரம்: போலீஸ் வேன், சிறைத்துறை பேருந்து மோதல்: 16 பேர் பலி
01 Sep 2025விண்ட்ஹொக் : தெற்கு ஆப்பிரிக்காவில் போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
ஜார்க்கண்ட்டில் 2 மாவோயிஸ்டுகள் கைது
01 Sep 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன்கள் குப்பைகள் அகற்றம்
01 Sep 2025சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ திடீர் ஆதரவு
01 Sep 2025சென்னை : சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்திறகு துரை வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்: உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு தீவிரம்
01 Sep 2025டெல்லி : டெல்லியில் பரவும் பறவை காய்ச்சலால் உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம் அடைந்துள்ளது.
-
பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அடித்து நொறுக்கிய இலங்கை அரசு
01 Sep 2025ராமேசுவரம் : பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அடித்து உடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாம் இசை வெளியீட்டு விழா
01 Sep 2025ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர் நடிக்கும் படம் பாம்.
-
மூளையை தின்னும் அமீபா: கேரளாவில் குழந்தை உள்ளிட்ட 2 பேர் பலி
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
-
இந்த வாரம் வெளியாகும் காந்தி கண்ணாடி
01 Sep 2025ரணம் படத்தை இயக்கிய ஷெரிப் தற்போது இயக்கியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார்.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய வழக்கு : அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
01 Sep 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்துகளை மீட்கவும், பாதுகாக்கவும் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்வு கட்டாயம் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
01 Sep 2025புதுடெல்லி : ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
01 Sep 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஷாங்காய் மாநாட்டுக்குப்பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி
01 Sep 2025தியான்ஜின் : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்கு பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்