எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் மற்றும் அடுத்த ஐ.பி.எல். சேர்மன் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் பதவியில் இருந்து விலகினார். அவர், கடந்த 2022-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பி.சி.சி.ஐ. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு அதிகாரியும் 70 வயதுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. ஐ.பி.எல். சேர்மனாக இருந்து வரும் அருண் துமால் பி.சி.சி.ஐ.-யில் 6 வருடங்கள் பதவி காலத்தை நிறைவு செய்துள்ளதால் அவரும் விலக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். இதனால் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பும் வெளியாகக்கூடும்.
____________________________________________________________________________________
இந்தியா-ஜப்பான் ஆட்டம் டிரா
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் அணியில் ஹிரோகா முரயமா மற்றும் புஜிபயாஷி ஆகியோர் தலா ஒரு கோலும், இந்திய அணியில் ருதுஜா மற்றும் நவ்னீத் கவுர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.
____________________________________________________________________________________
இந்திய வீராங்கனை ஜரீன் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூர் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் 51 கிலோ எடைபிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனீபர் லோசானோவை தோற்கடித்தார். இதில் நடந்த மற்ற ஆட்டங்களில் மகளிருக்கான 75 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், ஆண்களுக்கான 70 கிலோ எடைபிரிவில் ஹிதேஷ் குலியாவும் தோல்வியை தழுவினர்.
____________________________________________________________________________________
போர்ச்சுகல் அணி அபார வெற்றி
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது. 40 வயதிலும் ரொனால்டோவின் அசத்தலான கோல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அர்மீனியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜாவோ பெலிக்ஸ் 10, 61ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ரொனால்டோ 21,46-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
ஜாவோ கன்செலோ 32-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார். இந்தப் போட்டியில் 72 சதவிகித பந்தினை போர்ச்சுகல் அணி தன் கட்டுக்குள் வைத்திருந்தது. குரூப் எஃப் அணிகளில் முதல் அணியாக போர்ச்சுகல் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ரொனாடோ மொத்தமாக 942 கோல்களும் சர்வதேச போட்டிகளில் 140 கோல்களையும் நிறைவு செய்துள்ளார். கார் விபத்தில் மறைந்த தியாகோ ஜோடாவிற்கு போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் மரியாதை செலுத்தினார்கள். கோல் அடுத்து சில வீரர்கள் ஜோடாவின் பாணியில் கொண்டாடிதும் சமூக வலைதளத்தில் வைரலானது.
____________________________________________________________________________________
இலங்கை வீழ்த்திய ஜிம்பாப்வே..!
ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஹராரேவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தங்களது ஆகக்குறைந்த டி20 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளில் இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ரஜா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அது ஏன் என்று பிட்சைப் பார்க்கும் போதுதான் தெரியவந்தது. இலங்கை அணி 80 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேவும் சமீராவின் வேகத்துக்குத் திக்குமுக்காடினாலும் ரியான் பர்ல் மற்றும் தஷிங்க முஷேகிவாவின் பங்களிப்பின் மூலம் 14.2 ஓவர்களில் 84/5 என்று வெற்றி பெற்றது.
பவர் ப்ளேயில் ஜிம்பாப்வே பவுலர் முசரபானி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இலங்கை 37/4 என்று சரிந்தது. சரித் அசலங்கா 18 ரன்களையும் தசுன் சனகா 15 ரன்களையும் எடுக்க ஒருவழியாக 75 ரன்களைக் கடந்து 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்குச் சுருண்டது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 3 விக்கெட்டுகளையும் கேப்டன் சிகந்தர் ரஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிகந்தர் ரஜா தன் 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை. அபாய வீரர் கமிந்து மெண்டிசை 4வது பந்தில் டக் அவுட் ஆக்கினார் ரஜா. தன் 3வது ஓவரில் கேப்டன் சரித் அசலங்கா மற்றும் சமீராவை வீழ்த்தி 4 ஓவர்களில் 11/3 என்று ரஜா ஆட்ட நாயகன் விருதுக்குரியவரானார்.
____________________________________________________________________________________
தென் ஆப்பிரிக்க வீரருக்கு அனுமதி
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார். இருப்பினும் அறிமுக போட்டியிலேயே அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். கிரிக்கெட் விதிப்படி, பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து 31 வயதான சுப்ராயன் கடந்த மாதம் 26-ம் தேதி அன்று பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்தினார். சோதனை முடிவில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்துவீசுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா மீண்டும் சாம்பியன்
07 Sep 2025நியூயார்க் : அமெரிக்கா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமன்டா அனிசிமோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் மோதினர்.
-
செப்.28-ல் பி.சி.சி.ஐ. தலைவர் தேர்வு
07 Sep 2025இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
-
டி-20 கிரிக்கெட் போட்டி: கோலி, சூர்யகுமார் யாதவை முந்தி சிக்கந்தர் ராசா மாபெரும் சாதனை..!
07 Sep 2025ஹராரே : டி-20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவை முந்தி சிக்கந்தர் ராசா மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
-
ஆஸி., ஏ-க்கு எதிரான தொடர்: இந்திய அணியில் ரோகித், கோலி விளையாட வாய்ப்பு
07 Sep 2025மும்பை : ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2025.
08 Sep 2025 -
கடந்த 5 ஆண்டுகளில் பி.சி.சி.ஐ.யின் வருவாய் ரூ.14,627 கோடி உயர்வு
07 Sep 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
லோகா - அத்தியாயம் 1 சந்திரா, படத்தின் வெற்றி விழா
08 Sep 2025துல்கர் சல்மானின் வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’.
-
இயக்குனர் முருகதாஸை புகழ்ந்த சிவகார்த்திகேயன்
08 Sep 2025இயக்குனர் முருகதாஸ் டென்சன் ஆகமால் இயல்பாக படப்பிடிப்பு நடத்துவார் என சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
-
மதராஸி திரைவிமர்சனம்
08 Sep 2025துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர பயங்கரவாத கும்பல் ஒன்று முயற்சிக்கிறது.
-
அடுத்த வாரம் வெளியாகும் பிளாக்மெயில்
08 Sep 2025மு.
-
பேபி கேர்ள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
08 Sep 2025நிவின் பாலி நடிக்கும், திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்
08 Sep 2025ஜமீன் குடும்பத்தை உதறிவிட்டு காதல் மனைவி அர்ச்சனாவுடன் சென்னைக்கு வருகிறார் பாலாஜி சக்தி வேல்.
-
இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
08 Sep 2025சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் நாளை வரை அவகாசம்
08 Sep 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
சுயமரியாதை கொள்கையில் நான் முதலீடு செய்து வந்திருக்கிறேன்: செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் பதில்
08 Sep 2025சென்னை, தனது வெளிநாடு பயணம் குறித்து இ.பி.எஸ்.
-
வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
08 Sep 2025சென்னை, ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னை திரும்பினார்.
-
தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை; வடமாநில இளைஞர் கைது
08 Sep 2025தூத்துக்குடி : தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் வடமாநில இனைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Sep 2025சென்னை, தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதாரை ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
08 Sep 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
33 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: வெளிநாடு பயணம் மாபெரும் வெற்றி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
08 Sep 2025சென்னை, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய
-
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
08 Sep 2025குல்காம், காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரின்போது, வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு வரி விதிப்பது சரியே: ட்ரம்புக்க ஜெலன்ஸ்கி திடீர் ஆதரவு
08 Sep 2025கீவ், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பது சரியான யோசனை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர சோதனை
08 Sep 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
-
ஆர்.பி.உதயகுமார் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
08 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வின் எதிர்கட்சி துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,வின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார்.
-
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை - போராட்டம்
08 Sep 2025காத்மண்டு, நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது இதனை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது.