எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
வாய் தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகனின் புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பேக்கரி கடை உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில், முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படாமல் இருந்தனர்.
இதுகுறித்து முருகன் தரப்பினர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள தவறியதாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேசுக்கு நீதிபதி ப.உ.செம்மல் கண்டனம் தெரிவித்தார். மேலும் நேற்று மாலை 5 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால் டி.எஸ்.பி. கணேஷ் சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிடப்போவதாக எச்சரித்தார்.
இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்யாததால், நீதிமன்றத்தில் சீருடையில் காத்திருந்த டி.எஸ்.பி. சங்கர் கணேசை காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டி.எஸ்.பி. சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பதை அறிந்து காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் கிளை சிறை சாலை அருகே குவிந்தனர். டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறைக்குச் அழைத்து செல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் அழைத்து செல்லப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அதேபோல, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தரப்பிலும் வக்கீல் ஒருவர் ஆஜராகி வழக்கு தொடரப்போவதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தாக்கல் செய்தால், நேற்று பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார். மேலும், இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏதோ வழக்கத்துக்கு மாறான சம்பவம் நடந்துள்ளது'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் டி.எஸ்.பி.யை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது
09 Sep 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்ட
-
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை
09 Sep 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
-
பிரிக்ஸ் அமைப்பு குறித்து ட்ரம்ப் ஆலோசகர் விமர்சனம்
09 Sep 2025நியூயார்க், பிரிக்ஸ் அமைப்பு குறிதது அதிபர் ட்ரம்ப் ஆலோசகர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Sep 2025சென்னை : வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி
-
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
09 Sep 2025சென்னை : புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம்: பிரதமர் பதவியில் இருந்து கே.பி.சர்மா ஒலி ராஜினாமா
09 Sep 2025காட்மாண்டு, நேபாள அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் குறித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பி. சர்மா ஒலி.
-
மனிதன் தெய்வமாகலாம் படத் தலைப்பை வெளியிட்ட தனுஷ்
09 Sep 2025வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
-
என்னால் உயிர் வாழ முடியாது: நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு
09 Sep 2025பெங்களூரு : பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது.
-
கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் - ரோடு ஷோ
09 Sep 2025கோவை : கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரும் 13-ம் தேதி பாராட்டு விழா
09 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற 15-ம் தேதி இளையராஜாவுக்கு பராட்டு விழா நடக்கிறது. இதில் முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
-
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
09 Sep 2025டெல்லி : அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
-
சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு
-
காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
09 Sep 2025சென்னை : காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்திற்கான வெற்றி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Sep 2025சென்னை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கம் நம்மால்தான் முடியும், 2026-ல் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி என
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல் காந்தி வாக்களித்தனர்
09 Sep 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
-
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு
09 Sep 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறிதது ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாளை டெல்லி பயணம்
09 Sep 2025சென்னை, தமீழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
-
அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
09 Sep 2025சென்னை : அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் : இஸ்ரேல்
09 Sep 2025டெல் அவிவ், முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
-
2030-ம் ஆண்டுக்குள் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
09 Sep 2025சென்னை, “எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள்...
-
கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
09 Sep 2025புதுடெல்லி, கொல்கத்தாவில் முப்பட தளபதிகள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக வாக்களித்த பிரதமர்
09 Sep 2025புதுடெல்லி, நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெறும் என த
-
திருச்சியில் தொடங்கி மதுரையில் முடிக்கிறார்: சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார் விஜய்!
09 Sep 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் செப்.13 முதல் தொடங்குகிறார்.
-
செப்.19 ல் வெளியாகும் படையாண்ட மாவீரா
09 Sep 2025இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் படையாண்ட மாவீரா. இந்த திரைப்படத்தில் வ.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அபராதத்துடன் ஐகோர்ட் தள்ளுபடி
09 Sep 2025சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.