எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறதா என்ற கேள்விக்கு சென்னை ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்டவிரோதமானது என்றும் அறிவிக்க கோரி நம்பிராஜன் என்ற உறுப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்த போது, நம்பிராஜன் தரப்பில், பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது. நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிடப்பட்டது.
மேலும், ஐகோர்ட் நீதிபதியை ஆணையராக நியமித்து நடிகர் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பில், தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என கருதி, நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போதும், வழக்குகள் காரணமாக 2022ஆம் ஆண்டு தான் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர் என்றும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதங்களுக்காக, விசாரணை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: மதுரையில் மதுக்கடைகள் மூடல்
10 Sep 2025மதுரை : இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் இன்று மதுக்கடைகள் செயல்படாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
10 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச மிக ஆவலாக உள்ளேன் : பிரதமர் நரேந்திரமோடி பதிவு
10 Sep 2025புதுடெல்லி : அதிபர் ட்ரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
-
திருச்சி மரக்கடையில் விஜய் பிரச்சாரம்: காவல்துறையின் நிபந்தனைகளை ஏற்றது த.வெ.க.
10 Sep 2025சென்னை : திருச்சி மரக்கடையில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்பதாக த.வெ.க அறிவித்துள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
10 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தையும் தாண்டி புதிய உச்சத்தை எட்டி இருந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றமி
-
கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக ஐகோர்ட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேவியட் மனு தாக்கல்
10 Sep 2025சென்னை : பா.ம.க.வின் பெயர் சின்னம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனுக்களை ராமதாஸ் தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-09-2025.
10 Sep 2025 -
தொடர் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை
10 Sep 2025தேனி : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : அக்டோபர் முதல் பணிகளை தொடங்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்
10 Sep 2025புதுடெல்லி : பீகாரைத் தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
-
நேபாளத்தில் பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு: களத்தில் இறங்கிய ராணுவம்
10 Sep 2025காட்மாண்டு : நேபாளத்தில் பிரதமர் வீட்டிக்கு தீவைக்கப்பட்டதால் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக ரத்து
10 Sep 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ராஜாவைத் தாலாட்டும் தென்றல்: இளையராஜாவுக்கு பாராட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு
10 Sep 2025சென்னை : ராஜாவைத் தாலாட்டும் தென்றல் - நம் பாராட்டு விழா என்று இசைஞானி இளையாராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறவுள்ள பாராட்டு விழா குறித்து முதல்வர் மு.க.
-
தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் செயல்படுத்துவோம் : விவசாயிகளிடம் இ.பி.எஸ். உறுதி
10 Sep 2025பொள்ளாச்சி : தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க.
-
காவலர் நாள் - 2025: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி
10 Sep 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-ல் காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
-
சர்வதேச விமான நிலையம் மூடல்; ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்
10 Sep 2025காத்மாண்டு, காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது.
-
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி
10 Sep 2025கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: பொதுமக்கள் 20 பேர் பலி
10 Sep 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைதாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பிற்கு ரூ.1,600 கோடி நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
10 Sep 2025சண்டிகர் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
-
இந்தியா-ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி
10 Sep 2025புதுடெல்லி, கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க 65 வீரர்களைக் கொண்ட இந்திய ஆயுதப்படைக் குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.
-
வரிவிதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் விரைவில் பேச உள்ளேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
10 Sep 2025வாஷிங்டன், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பிரதமர் மோடியுடன் விரைவில் பேச உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
-
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்? சென்னை ஐகோர்ட் கேள்வி
10 Sep 2025சென்னை, நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறதா என்ற கேள்விக்கு சென்னை ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
-
வரும் 22-ம் தேதி சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
10 Sep 2025சென்னை : சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் வருகிற 22-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.
-
பார்லி. மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
10 Sep 2025புதுடெல்லி : பாராளுமன்ற மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
-
விரைவில் தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம்
10 Sep 2025சென்னை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Sep 2025- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.