முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      உலகம்
Jail 2024-10-04

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.

இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணம் ஓல்ட்பெரி பகுதியில் உள்ள பூங்காவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் (வயது 20) கடந்த 3 தினங்களுக்கு முன்பு காலை 8.30 மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் அவரை கடுமையாக தாக்கினர். பின்னர், இளம்பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இங்கிலாந்தை விட்டு வெளியேறி உனது நாட்டிற்கு செல் என்றும் இளம்பெண்ணிடம் 2 பேரும் கூறி தாக்கியுள்ளனர்.

தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்திய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தாக்குதல், பாலியல் வன்கொடுமை சம்பவம் இனவெறி ரீதியில் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து