எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார். முதலில் சிங்காநல்லூர் தொகுதியில் ரோடு ஷோ சென்ற இ.பி.எஸ்.க்கு கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து ஜி.வி ரெசிடென்சி இணைப்புச் சாலையில் குழுமியிருந்த மக்களிடையே இ.பி.எஸ். உரையாற்றினார்.
“கோவை என்றாலே தமிழ்நாட்டில் தொழில் நிறைந்த மாவட்டம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இங்கு 3 ஷிப்ட்டும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. தி.மு.க. அவல ஆட்சியில் ஒரு ஷிப்ட் தான் நடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதுதான். மீண்டும் தொழில் நிறைந்த மாவட்டமாக இதனை உருவாக்கிக்கொடுப்போம்.
சிங்காநல்லூரில் ரயில்வே மேம்பாலம் தொடங்கி பிருந்தாவன் நகர், ஏர்போர்ட் சாலை வழியாக அவிநாசி சாலை முடிய லிங்க் ரோடு போடுவதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் நிலங்களை எல்லாம் எடுத்து திட்டம் தொடங்கியபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டத்தை முடக்கிவிட்டனர், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மேம்பாலம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்.ஐ.எச்.எஸ் காலனி எல்சி 6ல் மேம்பாலப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது, தி.மு.க. திட்டமிட்டு திட்டத்தை விரைவுபடுத்தாமல் விட்டது, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். திருச்சி சாலையை இணைக்கும் பணியை விமான நிலையத்துக்கு ஒப்படைத்துள்ளனர், அதை மாநில அரசே எடுத்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் கேட்ட இடங்களில் எல்லாம் பாலம் கட்டிக்கொடுத்தோம், விமான நிலைய விரிவாக்கம் கூட அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது, தி.மு.க. ஆட்சியில் முடங்கிக்கிடக்கிறது, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் விரைந்து விரிவாக்கப் பணிகள் முடித்துக்கொடுக்கப்படும். பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டப் பணிகள் கொண்டுவரப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். தமிழ்நாட்டிலேயே நீளமான ஒரே பாலம் 10 கிலோமீட்டர், அவிநாசி சாலையில் இருந்து உப்புளிபாளையம் வரை உயர்மட்டப் பாலம், அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்தோம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 1950 கோடியில் இத்திட்டத்தைக் கொடுத்தோம். இது சாதாரண திட்டமில்லை, இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வரப்பிரசாதமாக இருக்கும். சாலையை விரிவாக்கம் செய்யமுடியாது, அதனால் திட்டமிட்டு கண்டறிந்து அதற்கேற்றவாறு உயர்மட்டப் பாலம் அமைத்தோம்.
அ.தி.மு.க. 10 ஆண்டுகாலத்தில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார், அதனால்தான் இதனை சொல்கிறேன். இந்த ஒரு தொகுதியிலே இவ்வளவு கொடுத்தோம். கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை, அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் தி.மு.க. அரசின் சாதனை. நாம் கட்டிய பாலம், அதனை திறந்துவைத்து ஸ்டாலின் போகிறார், சிறப்பாக கட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும், தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் என்றால், அது ஆற்றில் அடித்துச்சென்றுவிடும். தென்பெண்ணை ஆற்றில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதத்திலேயே வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இது ஜனநாயகமுள்ள கட்சி. கொரோனா காலத்தில் விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், தொழிலாளர்களுக்கு தேவையான நிதி கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். மக்கள் துன்பப்படும் போதெல்லாம் காப்பாற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. மீண்டும் அ.தி.மு.க. அரசு மலரும், உங்களது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.