எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகரில்...
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடந்தது. இறுதிப்போட்டியை எட்டுவதற்கான தூரம் 84.50 மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை எட்ட வேண்டும் அல்லது அதிக தூரம் வீசும் டாப்-12 வீரர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள். இதில் மொத்தம் 37 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இலக்கை அடைந்தார்...
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட நடப்பு சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா எளிதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தனது முதல் முயற்சியிலேயே 84.85 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தகுதி இலக்கை அடைந்தார். பதக்கத்துக்கான இறுதிப்போட்டி நேற்று நடந்தது . இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மிக மோசமாக செயல்பட்டார். முதல் வாய்ப்பில் 84.03 மீட்டர் தூரம் வீசினார் நீரஜ் சோப்ரா. தொடர்ந்து மற்ற வாய்ப்புகளில் அவர் 84.03 மீட்டருக்கும் குறைவாகவே வீசினார். இதனால் நீரஜ் சோப்ராவின் அதிகபட்சம் 84.03 மீட்டராக எடுத்துக்கொள்ளப்பட்டது.
ரசிகர்கள் அதிர்ச்சி...
இதனால் நீரஜ் சோப்ரா 8வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார் . பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மற்றொரு இந்திய வீரர் சச்சின் யாதவ் 86.27 தூரம் வீசி 4வது இடம் பிடித்த்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


