எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம், கல்லூரி பாதைக்கு “ஜெய்சங்கர் சாலை” என்றும், நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரமான எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி.வெங்கடராமன் தெரு” என்றும் பெயர் சூட்டி, அதற்கான பெயர்பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் கலைஞர் என்றும், தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றும் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம், கல்லூரி பாதைக்கு “ஜெய்சங்கர் சாலை” என்றும், நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி.வெங்கடராமன் தெரு” என்றும் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
ஜெய்சங்கர் சாலை:
மக்கள் கலைஞர் என்றும், தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றும் அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் அவர்கள் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அவர் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளிலும ஈடுபட்டுள்ளதோடு, கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்து வந்த நுங்கம்பாக்கத்திலுள்ள கல்லூரி பாதையை “ஜெய்சங்கர் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் நேற்று பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.
எஸ்.வி.வெங்கடராமன் தெரு:
மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கடராமன், விஜயா வாஹினி ஸ்டுடியோவில் லேப் உயரதிகாரியாக பணியாற்றினார். மேடை நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளதோடு, தமிழ்நாடு திரைப்படக் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியாக பணியாற்றியுள்ளார். அவர் தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சித் தொடர் “வண்ணக்கோலங்கள்” தயாரிப்பாளர் ஆவார். அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் கண்தானம், ரத்த தானம், குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை குறைபாடு பற்றி விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்ததோடு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். அவரது சேவையை சிறப்பிக்கும் வகையில், அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி. வெங்கடராமன் தெரு” என்று பெயர் சூட்டப்பட்டு, தமிழ்நாடு முதல்வரால் நேற்று பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அரசு உயர் அலுவலர்கள், நடிகர் ஜெய்சங்கர் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் நே.சிற்றரசு, மண்டல குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-09-2025.
26 Sep 2025 -
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு
26 Sep 2025சென்னை : ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
-
நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல: விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி மறைமுக விமர்சனம்
26 Sep 2025சென்னை, நடிகர் விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
26 Sep 2025புதுடெல்லி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
26 Sep 2025சென்னை, தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு : கேரள முதல்வர் குற்றச்சாட்டு
26 Sep 2025திருவனந்தபுரம் : ஜி.எஸ்.டி.
-
விசாரணையின்போது சிறுவன் மரணம்; 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு
26 Sep 2025மதுரை, விசாரணையின்போது மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த சிறுவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறையை மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
-
சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
26 Sep 2025சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் பேச்சுவார்த்தை
26 Sep 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி நிகோலாயெவிச் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
93-வது பிறந்தநாளை முன்னிட்டு மன்மோகன் சிங்கிற்கு பிரதமர், ராகுல் வாழத்து
26 Sep 2025டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
லடாக் வன்முறை: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி கைது
26 Sep 2025புதுடெல்லி : லடாக் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
கரூரில் இன்று விஜய் பிரசாரம்; த.வெ.க. தொண்டர்களுக்கு கட்சி தலைமை முக்கிய அறிவுறுத்தல்
26 Sep 2025சென்னை, இன்று நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், த.வெ.க.
-
தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிப்பு
26 Sep 2025சென்னை, தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
-
பீகார் மாநிலத்தில் சுயமாக தொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
26 Sep 2025புதுடெல்லி, பீகாரில் 75 லட்சம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி த
-
சென்னை, கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Sep 2025சென்னை, சென்னை, கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள்
26 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் காளி வேடம் அணிந்து வந்தனர்.
-
விடைபெற்றது 'மிக்-21 போர் விமானம்: இந்திய - ரஷ்ய உறவுக்கு ஆழமான சான்று என ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
26 Sep 2025சண்டிகர், இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது.
-
தொடரை வென்ற இந்திய அணி
26 Sep 2025இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது.
-
மேற்கு கரை இஸ்ரேலுடன் இணைப்பா? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுப்பு
26 Sep 2025வாஷிங்டன் : மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து
26 Sep 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தி.மு.க.வுக்காக பிரச்சாரம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
26 Sep 2025சென்னை : 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன் என்று நடிகர் எஸ்.பி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு “ஜெய்சங்கர் சாலை” என பெயர்: பெயர் பலகையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
26 Sep 2025சென்னை, திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம், கல்லூரி பாதைக்கு “ஜெய்சங்கர் சாலை” என்றும், நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்ப
-
மாணவியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
26 Sep 2025தென்காசி, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்ட நிலையில், இதற்கான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மா
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா 'ஏ'
26 Sep 2025லக்னோ : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா ஏ அணி.
போட்டி டிரா...
-
ராமதாசை கொலை செய்ய சதி: அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
26 Sep 2025சென்னை, ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள் என்று அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.