எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கரூர் : கரூரில் நேற்று த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியான நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தால் கரூரில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக இருந்தது.
அரசு மற்றும், தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள், பெண்கள் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, இன்று காலை கரூருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Sep 2025ராமேசுவரம் : பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உலகிலேயே போக்குவரத்து நெரிசல்: பெங்களூருக்கு 3-வது இடம்
27 Sep 2025பெங்களூர் : போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2025.
27 Sep 2025 -
பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாகிறது..? தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
27 Sep 2025பாட்னா, பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
அறத்தை கற்றுக்கொள்ள வேண்டும்: சீமானுக்கு இ.பி.எஸ். கண்டனம்
27 Sep 2025சென்னை, அண்ணா, எம்.ஜி.ஆரை இழிச்சொல் உரைத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்
27 Sep 2025சென்னை : சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் 2-வது நாளாக அமித்ஷா ஆலோசனை
27 Sep 2025பீகார் : பீகாரில் 2-வது நாளாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.
-
வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்
27 Sep 2025வடமேற்கு : வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
நாமக்கலில் விஜய் பிரசாரத்தின் போது நுழைந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்ட தொண்டர்கள்
27 Sep 2025நாமக்கல் : நாமக்கலில் விஜய் பிரசார கூட்டத்தில் நுழைந்த ஆம்புலன்சுக்கு தொண்டர்கள் வழிவிட்டனர்.
-
போர் முடிந்த பிறகு பதவி விலகல்: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி இல்லை: ஸெலென்ஸ்கி அறிவிப்பு
27 Sep 2025உக்ரைன் : அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறிதது உக்ரைன் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் புதிதாக ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
27 Sep 2025சென்னை : 2021-ல் தி.மு.க.
-
வார இறுதி நாளில் உயர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
27 Sep 2025சென்னை, வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
-
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் விரைந்தார்
27 Sep 2025கரூர், கரூரில் நேற்று த.வெ.க.
-
நாடு முழுவதும் 100 சதவீத பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி : கிராமங்கள் பயன்பெறும் என பெருமிதம்
27 Sep 2025புவனேஸ்வர் : நாடுமுழுவதும் 100 சதவீத மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார்.
-
இலங்கைக்கு எதிரான ஆட்டம்: சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது
27 Sep 2025துபாய் : இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
27 Sep 2025ஒகேனக்கல் : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 645 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது : 1905 தேர்வு மையங்களில் 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
27 Sep 2025சென்னை : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 645 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 727 கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
27 Sep 2025சென்னை : குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
லடாக்: லே பகுதியில் ஊரடங்கு தளர்வு
27 Sep 2025லடாக் : லே பகுதியில் ஊரடங்கு தளர்வு; கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
-
தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
27 Sep 2025டெல்லி : தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
-
மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளவை சேர்ந்த 11 மாணவர்கள் கைது
27 Sep 2025மங்களூரு : மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
அதிபர் ட்ரம்புக்கு எதிராக கருத்து: கொலம்பியா அதிபரின் அமெரிக்கா விசா ரத்து
27 Sep 2025வாஷிங்டன் : கொலம்பியா அதிபரின் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
-
ஐதராபாதில் தொடர் கனமழை: 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
27 Sep 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி: சம்பவம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்
27 Sep 2025கரூர், கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள், 10 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
27 Sep 2025சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இ.பி.எப்.ஓ.