எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் இதுவரை 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- உலக புத்தொழில் மாநாடு தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது.,
தமிழ்நாட்டு ஸ்டார் அப் நிறுவனங்களை உலக அளவில் உயர்த்திடவும், அவற்றுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், இந்தியாவிலேயே முதல் முதலாக வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு – கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. அக்டோபர் 9 ஆம் தேதி முதல்-அமைச்சர் மாநாட்டினை தொங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டிற்கான லோகோ-வையும், இணைய தளத்தையும், துணை முதல்-அமைச்சர் 26.04.2025 அன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்கள்.
மாநாட்டில் 39 நாடுகளில் இருந்து, 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் பங்குபெற உள்ளனர். 1000 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன், 315 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. முதல்-அமைச்சர் பொறுபேற்ற பின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை ஊக்குவிக்க தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து ஸ்டார்ட் அப் உருவாக்கப்பட்டது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க நிதியுதவி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இது வரை கடந்த 4 ஆண்டுகளில் 43 எஸ்.சி. / எஸ்.டி. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உட்பட 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ரூ. 79 கோடியே 49 லட்சம் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. அரசு முதலீடுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களில் 68 நிறுவனங்கள் ரூ. 554 கோடியே 49 லட்சம் மதிப்பில் வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுள்ளது, இதன் மூலம் 1000 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தனியார் முதலீட்டாளர்களையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைக்கும் தளத்தின் மூலம் ரூ. 128 கோடியே 84 லட்சம் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் டி.என். மூலம் நவீன வடிவமைப்பு உதவி மையம் - டிசைன் ஸ்டூடியோ கல்வி நிறுவனங்களில் த்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட -தளம் தனியர் முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்அப் நிறுவனங்களை இணைக்கும்- தளம் புத்தொழில் நிறுவனங்களை அறிமுகப்படுத்தும் (Launch pad) நிகழ்ச்சிகள் எஸ்.சி./எஸ்.டி. தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையம், ஸ்பேஸ் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி நிதி உதவி ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீட்டில்- கிராமம் தோறும் புத்தொழில் மையம். 11 நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள். என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாகியதால் 2021 இல் 2032 ஆக இருந்த ஸ்டார்அப் நிறுவனங்களின் பதிவு தற்போது 12,171 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6063 நிறுவனங்களில் பெண்கள் நிறுவனர்களாக உள்ளனர். அதிமுக ஆட்சியில் ஸ்டார்அப் தர வரிசைப் பட்டியலில் கடைசியில் இருந்த தமிழ்நாடு 2021 இல் 3 ஆம் இடம் ஆன லீடர் விருதினை பெற்றது. 2022 ஆம் ஆண்டு சிறந்த செயல்பாட்டாளர் விருதினை பெற்று முதல் இடத்தை பெற்றது.
கழக அரசு பொறுப்பேற்ற 4 ½ ஆண்டுகளில் 13 மாவட்டங்களில் 697.81 ஏக்கர் பரப்பளவில் ரூ. 386 கோடியே 76 லட்சம் மதிப்பில் 17 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் 543.31 ஏக்கர் பரப்பளவில் ரூ. 419 கோடியே 58 லட்சம் மதிப்பில் 16 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வெற்றிகரமான திட்டங்களால், கடந்த 4 ½ ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 133 கோடியே 26 லட்சம்
மானியத்துடன், ரூ. 5 ஆயிரத்து 490 கோடியே 80 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் உலகின் தலைசிறந்த புத்தொழில் சூழல் கொண்ட முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டினை கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு இந்த புத்தொழில் மாநாடு நடத்தப்படுகிறது அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காசோலை தொடர்பான பரிவர்த்தனை: புதிய நடைமுறை இன்று முதல் அமல்: ரிசர்வ் வங்கி
03 Oct 2025புதுடெல்லி : காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என ரிசர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-10-2025.
03 Oct 2025 -
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ. எம்.பி.க்கள் குழு கடிதம் : விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள்
03 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.
-
கச்சத்தீவு விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
03 Oct 2025சென்னை, கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ராகுல் - ஜடேஜா - ஜூரல் அபாரம்: அகமதாபாத் முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா..!
03 Oct 2025அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
-
தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை : சட்டப்பேரவை தலைவா் பேட்டி
03 Oct 2025திருநெல்வேலி : தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை என்று தெரிவித்துள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந
-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Oct 2025சென்னை, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி.
-
கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி: முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
03 Oct 2025ராமநாதபுரம், தமிழகத்தில் 3 முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத மத்திய நிதியமைச்சர் கரூ
-
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
03 Oct 2025சென்னை : தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (அக்.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கார்கே
03 Oct 2025டெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
-
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
03 Oct 2025சென்னை, கீழடி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Oct 2025சென்னை : கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட் கிளை
03 Oct 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சி: அமித்ஷா
03 Oct 2025புதுடெல்லி, இந்தியாவில் பால் வளத்துறை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
டி20 உலகக் கோப்பை தொடர்: ஜிம்பாப்வே, நமீபியா தகுதி
03 Oct 2025கேப்டவுன் : ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.
-
சோனம் வாங்சுக்கை விடுவிக்கக்கோரி அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு
03 Oct 2025புதுடெல்லி : தனது கணவரை விடுவிக்கக்கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கம் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
03 Oct 2025சென்னை : தமிழகத்தில் இதுவரை 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க.வுக்கு ஐகோர்ட் கண்டனம்
03 Oct 2025சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உலக சாம்பியன்ஷிப்பில் பளு தூக்குதல்: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு
03 Oct 2025ஓஸ்லோ : உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுக்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி : நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என காட்டம்
03 Oct 2025மதுரை : கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்திலேயே சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?
-
வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி
03 Oct 2025பாட்னா : உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பீகாரின் தலைநகர் பாட்னாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
-
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம் : தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
03 Oct 2025சென்னை : தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி செலவில் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க முன்னோடித் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
-
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
03 Oct 2025மதுரை : த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
-
ராமநாதபுரம் அருகே பேராவூரில் அரசு விழா: ரூ.738 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அடிக்கல்
03 Oct 2025ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.
-
தங்கம் விலை உயர்வு
03 Oct 2025சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்து வருகிறது.