முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் கனமழை: ஓசூரில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2025      தமிழகம்
TN 2024 11 20

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கனமழையால் ஓசூர் உள்ள குடியிருப்பில்  வெள்ளம் சூழ்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில், மக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென வான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத்தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் மழை பெய்யத் தொடங்கி, சிறிது நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் ஓசூர் பஸ் நிலையம், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், பாகலூர் ரோடு சர்க்கிள், பாகலூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து இரவிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியில் நள்ளிரவில் 12 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக திப்பாலம் கிராமத்திற்கும் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்வதால் ஊரிலிருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர். மேலும், தொரப்பள்ளி என்ற பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து