எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதிய விவகாரத்தில் விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கடந்த மாதம் 13-ந்தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். சனிக்கிழமைகள்தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்ட அவர் அதற்கு அடுத்த வாரம் 20-ந்தேதி நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். 3-வது வாரமாக கடந்த 27-ந்தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இன்னொரு நிர்வாகியான நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டது.கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இருவரும் தலைமறைவாக உள்ளனர். 2 பேரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியான நிலையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு அதுபோன்று இனி வரும் காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்தார்.
விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் போலீசார் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர். யாரும் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து அதில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது பற்றி போலீ சார் ஆய்வு செய்தனர்.
அப்போது கரூர் வேலாயுதம்பாளையம் சோதனை சாவடி பகுதியில் வைத்து தான் பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதியது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். விஜயின் பிரசார வாகனத்தின் பதிவு எண்களான டி.என்.14 ஏ.எஸ்.0277 என்ற எண் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டிரைவர் பெயர் இல்லாமல் வாகன டிரைவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பி.என்.எஸ். 281 என்கிற சட்டப் பிரிவில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்றவர்களின் உயிருக்கு காயம் ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். கரூர் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகில் பணியில் இருந்த ஏட்டு தெய்வ பிரபு அளித்த புகாரின் பேரிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வேலாயுதம் பாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய உள்ளனர்.
கிழக்கு கடற்கரை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தை எப்போது பறிமுதல் செய்யலாம் என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று வேலாயுதம்பாளையம் போலீசார் தெரிவித்து உள்ளனர். கரூர் போலீசார் சென்னை வந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னை மாநகர போலீசாரின் உதவியையும் கரூர் போலீசார் நாடி உள்ளனர். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
04 Oct 2025சென்னை : வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
-
வைகோ மருத்துவமனையில் அனுமதி
04 Oct 2025சென்னை : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்பு
04 Oct 2025சிவகாசி : சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்
04 Oct 2025திருச்சூர் : கேரளாவில் காரை கவிழ்த்தி காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
-
குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் நியமனம்
04 Oct 2025காந்தி நகர் : குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் விஸ்வகர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு
04 Oct 2025சென்னை : அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
-
இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு
04 Oct 2025காசா : இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பறிமுதல் செய்யப்படும் விஜய் பிரசார வாகனம்?
04 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசம்
04 Oct 2025நெல்லை : நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
-
காசாவில் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் : அமெரிக்க அதிர் ட்ரம்ப் வலியுறுத்தல்
04 Oct 2025வாஷிங்டன் : காசாவில் தாக்குதல் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
-
சுற்றுப்பயண தேதிகளில் திடீர் மாற்றம்: வரும் 8, 9-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் இ.பி.எஸ். பயணம்
04 Oct 2025சென்னை : நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 8, 9ம் தேதிகளி
-
மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி
04 Oct 2025மும்பை : மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்: பிரான்சில் ஈபிள் கோபுரம் மூடல்
04 Oct 2025பாரீஸ் : பிரான்சில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் கனமழை: ஓசூரில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்
04 Oct 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கனமழையால் ஓசூர் உள்ள குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்தது.
-
விஜய்யை கைது செய்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
05 Oct 2025சென்னை : “கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
-
காசா அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு 5-ம் தேதி இறுதி கெடு: ட்ரம்ப் அறிவிப்பு
04 Oct 2025வாஷிங்டன் : ஹமாஸ் அமைப்புக்கு 5-ந்தேதி இறுதி கெடு விதித்து அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
-
முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார்
04 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சிக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ராமநாதபுரம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
04 Oct 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்ய படை தாக்குதல்
04 Oct 2025கீவ் : உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.
-
இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
05 Oct 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவில் பள்ளி இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
-
விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது: சீமான்
04 Oct 2025சென்னை : விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. மயற்சி செய்கிறது என்று சீமான் கூறினார்.
-
திருட்டு வழக்கில் சிங்கப்பூரில் 2 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை
04 Oct 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இருமல் மருந்தால் குழந்தைகள் பலி: மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை
05 Oct 2025புதுடெல்லி : இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.
-
இந்தியாவின் பிரதமராக தமிழர்கள் யாருக்கும் எண்ணம் இல்லை: திருமாவளவன் ஆதங்கம்
04 Oct 2025சென்னை : தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக எண்ணம் யாருக்கும் இல்லை என்று திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.