எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழகத்தின் கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழகத்தின் கலப்பட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன. அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. சா்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் (பேட்ஜ் 13) உள்பட 5 மருந்துகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தினா்.
அதில், டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சு ரசாயனம், கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதம் இருப்பது கடந்த 2-ஆம் தேதி கண்டறியப்பட்டதை அடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோல்ட்ரிஃப் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஒடிஸா, புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடா்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டன.
அந்த மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த நிறுவனம் அதிகாரிகளால் கடந்த 3-ம் தேதி மூடப்பட்டது. ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக் கூடாது என விளக்கம் கேட்டு குறிப்பாணையும் அனுப்பப்பட்டது.
இதனிடையே, சா்ச்சைக்குரிய கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மருத்துவர் மற்றும் ஸ்ரீசென் பாா்மா உற்பத்தி நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மருத்துவர் பிரவீன் சோனி மூன்று நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். மருந்து உற்பத்தி நிறுவனமான ஸ்ரீசன் மருந்து நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சா்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்ட பின்னா், இதுவரை 20 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். ரங்கநாதனை(75 ) மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்த 7 பேர் கொண்ட காவலர்கள் குழுவினர் கைது செய்தனர்.
அசோக் நகர் போலீசாரின் உதவியுடன் மத்தியப் பிரதேச காவல்கள் குழு கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரத்திற்கு அழைத்துச் சென்று மத்தியப் பிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், ரங்கநாதன் நேற்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போக்குவரத்து காவலில் வைக்கப்பட்ட பிறகு சிந்த்வாராவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் இறந்துவிட்டதாகவும்; ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்தியப் பிரதேச துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான ராஜேந்திர சுக்லா புதன்கிழமை தெரிவித்தார். இந்த 20 குழந்தைகளில் 17 பேர் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பந்தூர்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனையைத் தடை செய்வதோடு, கடைகளில் தற்போதுள்ள இருப்புகளையும் பறிமுதல் செய்யவும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார்.
இதனிடையே, தமிழக அரசின் அலட்சியத்தால் குழந்தைகளின் மரணம் ஏற்பட்டது என்று மத்தியப் பிரதேச மாநில பொது சுகாதாரத் துறை இணையமைச்சா் நரேந்திர சிவாஜி படேல் குற்றஞ்சாட்டினாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன்: முதல்வர்
09 Oct 2025சென்னை: ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதி வரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் மு.க.
-
முதல்வர் இன்று பெங்களூரு பயணம்
09 Oct 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான முதல் குற்றவாளி நாகேந்திரன் மரணம்
09 Oct 2025சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபள தாதா நாகேந்திரன் உயிரிழந்தார்.
-
இந்தியா - இங்கி., இணைந்து கூட்டறிக்கை: புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர்
09 Oct 2025மும்பை: இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
09 Oct 2025சென்னை: ஒரு சவரன் விலை காலையில் ரூ.120 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
-
கலப்பட இருமல் விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் கைது
09 Oct 2025சென்னை: தமிழகத்தின் கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டெல்லியில் இன்று தொடக்கம்: இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி
09 Oct 2025புதுடெல்லி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் டெல்லியில் நடைபெற உள்ளது.
-
எத்தனை அடிமைகள் வந்தாலும் தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது திருமண விழாவில் துணை முதல்வர் பேச்சு
09 Oct 2025திண்டுக்கல்: பா.ஜ.க. தற்போது புதிய அடிமை கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். புதிய அடிமைகள் கூட கிடைக்கலாம்.
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆர்.ஜே.டி. தலைவர் தேர்தல் வாக்குறுதி
09 Oct 2025பாட்னா: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஆர்.ஜே.டி.யின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்
09 Oct 2025கான்பெரா: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் முன்னிலையில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்
-
இருமல் மருந்தால் ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக அதிகரிப்பு
09 Oct 2025சென்னை: இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகளில் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
-
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன்
09 Oct 2025நெல்லை: விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
09 Oct 2025சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-10-2025.
09 Oct 2025 -
நவம்பர் 18-ல் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்
09 Oct 2025சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 16 இல் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18 இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பிறகு பிரதமர் மோடி வரவேற்பு
09 Oct 2025புதுடெல்லி: அதிபர் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
வங்கதேசத்திற்கு எதிரான போட்டி: பல சாதனைகளை படைத்த ரஷித்கான்
09 Oct 2025அபுதாபி: வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு
09 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
-
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம்
09 Oct 2025இமயமலை: இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்தார்.
-
ஓய்வு குறித்து அஸ்வின் விளக்கம்
09 Oct 2025முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
அயோத்தி ராமர் கோவிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு
09 Oct 2025டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.
-
பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
09 Oct 2025கொல்கத்தா: பிரதமரை போல செய்படுகிறார் அமித்ஷா என்று மம்தா பானர்ஜி மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் ஒரு திருப்புமுனை பிரதமர் நெதன்யாகு தகவல்
09 Oct 2025இஸ்ரேல்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.