எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் டிராபியில் பாதியிலேயே அஸ்வின் வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.அஸ்வின் (39 வயது) இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கடந்த டிசம்பரில் ஓய்வை அறிவித்தார். பிளேயிங் லெவனின் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றதாக அப்போது தகவல் மூலம் தெரியவந்தது.
சமீபத்தில் ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்த அவர் பிபிஎல் தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் இது குறித்து அஸ்வின் பேசியதாவது: இந்திய அணியில் இடமில்லை என்றோ ஓய்வு பெற்று விடு என்றோ என்னை யாரும் சொல்லவில்லை. உண்மையில் நான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லும்போது 2-3 நபர்கள் ’வேண்டாம்; இன்னும் கூடுதலாக விளையாடு’ என்றே கூறினார்கள். கேப்டன் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீரும் மீண்டும் ஒருமுறை யோசி எனவும் கூறினார்கள். ஆனால், எனது ஓய்வு பற்றி அஜித் அகர்கரிடம் பெரிதாக பேசவில்லை. ஓய்வு பெற்றதில் எனது தனிப்பட்ட முடிவுதான் காரணம். யாரும் வற்புறுத்தவில்லை எனக் கூறினார்.
டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
நவம்பர் மாதத்தில் நடைபெறும் நட்பு ரீதியான போட்டியில் விளையாட ஆர்ஜென்டீன அணி கேரளத்துக்கு வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவிருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த டிக்கெட்டுகளின் விலை தோராயமாக ரூ.3,500 முதல் ரூ.10 லட்சம் வரையிலான வகைமைகளில் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 14ஆம் தேதி கொச்சிக்கு வரும் மெஸ்ஸி, நவ.17ஆம் தேதி நேரு திடலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார். கோழிக்கூட்டில் மெஸ்ஸி சாலை வலம் வருவது, கொச்சியில் ரசிகர்களைச் சந்திப்பது குறித்த நிகழ்வுகள் தற்போது பரிசீலித்து வருவதாகவும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. கொச்சியின் ஜிசிடிஏ 60,000 பார்வையாளர்கள் பங்கேற்கும்படி திடலை தயார்படுத்தி வருகிறது. ஐஎஸ்எல் போட்டிகளுக்கே 35,000- 40,000 பார்வையாளர்கள் மட்டுமே இருக்கும்படி அமைக்கப்படிருந்த இந்தத் திடலில் தற்போது இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் கடைசியாக விளையாடிதால் அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த இன்னிங்ஸ்: ஆஸி. கேப்டன்
ஆஸி. மகளிரணியின் அபாரமான வெற்றிக்கு வித்திட்ட பெத் மூனியின் இன்னிங்ஸ்தான் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் என ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மகளிரணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸி. அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அங்கிருந்து 221 ரன்களாக மாற பெத் மூனி (109) மற்றும் அலானா கிங் (51*) உதவினார்கள்.
இந்தப் போட்டி குறித்து ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி கூறியதாவது: இரண்டு புள்ளிகள் கிடைத்தன. நாங்கள் அடுத்த போட்டிக்குச் சென்றுவிடுவோம். பெத் மூனி விளையாடி, நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்பேன். நான் என் கிரிக்கெட் வாழ்நாளில் பெத் மூனியின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன். இதுவரை நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸை அவர் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் 150-160 ரன்கள் மட்டுமே எடுப்போம் என்றிருந்தது. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். 200 ரன்களைக் கடக்க மூனியும் அலானாவும் உதவினார்கள். சில நேரங்களில் பிட்ச் திடீரென மாறுகிறது. இனிமேல் பிட்ச்களுக்கு ஏற்ப விரைவாகவே நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ரூ.58 கோடியை நிராகரித்த வீரர்கள்
இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.
இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


