எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதில், பிரதமரின் தன் தானிய விவசாய திட்டம் ரூ. 24,000 கோடி மதிப்பிலானது. விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல், நிலையான விவசாய நடைமுறையை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்தல், நீர்பாசன வசதிகளை மேம்படுத்துத், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, ரூ. 11,440 கோடி மதிப்பீட்டில் பருப்பு வகைகளுக்கான சுயசார்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரித்தல், சாகுபடி பரப்பை அதிரித்தல், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், இழப்புகளைக் குறைப்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுளளது.
இவ்விரு திட்டங்களையும் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம், பிரதமரின் விவசாய வள மையங்கள், பொதுசேவை மையங்கள் ஆகியவற்றின் கீழ் விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இன்று (நேற்று) ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். பாரத ரத்னா விருது பெற்ற ஜெயபிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாள். இந்திய தாயின் சிறந்த புதல்வராக விளங்கிய இவர்கள், கிராமப்புற இந்தியாவின் குரல்களாக இருந்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், விவசாயிகளின் நலனுக்காக இரண்டு முக்கியமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் தன் தானிய விவசாய திட்டம், பருப்பு வகைகளுக்கான சுயசார்பு இயக்கம் ஆகிய இந்த இரண்டு திட்டங்களும், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் பொருளாதார நிலையை மாற்றும். இந்தத் திட்டங்களுக்காக இந்திய அரசு ரூ.35,000 கோடிக்கு மேல் செலவிடத் திட்டமிட்டுள்ளது.
விவசாயமும் விவசாயிகளும் எப்போதும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றனர். காலங்கள் மாறும்போது விவசாயமும் விவசாயிகளும் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, முந்தைய அரசாங்கங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் கைவிட்டன. எனவேதான், இந்திய விவசாயம் படிப்படியாக பலவீனமடைந்து வந்தது.
இந்தியா விரைவான வளர்ச்சியை அடைய, விவசாய முறை சீர்திருத்தம் அவசியம். இந்த சீர்திருத்தம் 2014-இல் தொடங்கியது. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. தானிய உற்பத்தி தோராயமாக 9 கோடி மெட்ரிக் டன்கள் அதிகரித்துள்ளன. பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி 6.4 கோடி மெட்ரிக் டன்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று, பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. விதைகள் முதல் சந்தைகள் வரை விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செயல்படுத்தியுள்ளோம்.
நாடு வளர்ச்சியடைய விரும்பினால், ஒவ்வொரு துறையிலும் தொடர் முன்னேற்றம் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டே பிரதமரின் தன் தானிய கிருஷி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் 36 அரசு திட்டங்களை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்துகிறது. இதுவரை, இந்த திட்டத்தின் மூலம் ரூ.3.75 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 92,000
11 Oct 2025சென்னை : தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்த நிலையில் மாலை மேலும் ரூ. 600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,000 ஆக உயர்ந்துள்ளது.
-
நாங்கள் செய்ததுபோன்று செயல்படுங்கள்: பாகிஸ்தானுக்கு ஆப்கான் அமைச்சர் வேண்டுகோள்
11 Oct 2025புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
முதல் முறையாக டாஸ் வென்ற சுப்மன் கில்லை கலாய்த்த வீரர்கள்
11 Oct 2025புதுடெல்லி : முதல் முறையாக டாஸ் வென்ற கேப்டன் சுப்மன் கில்லை வீரர்கள் கலாய்த்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-10-2025.
11 Oct 2025 -
மகளிர் உரிமைத் தொகை: நயினார் நாகேந்திரன் கேள்வி
11 Oct 2025சென்னை : மகளிர் உரிமைத் தொகை குறித்து நயினார் நாகேந்திரன் முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அனில் அம்பானியின் உதவியாளர் கைது
11 Oct 2025புதுடெல்லி : அனில் அம்பானியின் உதவியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
-
கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மாணவர் பலி
11 Oct 2025சென்னை : சென்னையில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழந்தான்.
-
சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? - அன்புமணி ராமதாஸ்
11 Oct 2025சென்னை : சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 12 தொகுதிகள்?
11 Oct 2025ராஞ்சி : பீகார் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 12 தொகுதிகள் கேட்டுள்ளது.
-
திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
11 Oct 2025பெங்களூரு : திருமணத்திற்காக உறவினரின் வீட்டில் தங்கம், பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
-
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: 2 குழந்தைகளை கொன்று பெண் தூக்கிட்டு தற்கொலை
11 Oct 2025பெங்களூரு : 2 குழந்தைகளை கொன்று இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தானை சேரந்தவர் கைது
11 Oct 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் உளவு பார்த்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை : மத்திய அரசு விளக்கம்
11 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ்
11 Oct 2025காசா : காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெற்றனர்.
-
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
11 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வருகிற 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
11 Oct 2025விருதுநகர் : சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. காயமோ, உயிரிழப்பு குறித்த தகவலோ இதுவரை வெளியாகவில்லை.
-
நாடு முழுவதும் சைபர் மோசடி: 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை
11 Oct 2025காந்தி நகர் : சைபர் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கை ஈடுபட்டனர்.
-
தீபாவளியை முன்னிட்டு நெல்லை, செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்
11 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி, செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் விரைவில் பணி நிரந்தரம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
11 Oct 2025சென்னை : 2026 பிப்ரவரிக்குள் கோவில்களில் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம்: திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது: கமல் எம்.பி.
11 Oct 2025சென்னை : கார் வழிமறிக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது என்று கமல் எம்.பி. தெரிவித்தார்.
-
டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன்கள் குவித்து டிக்ளேர்
11 Oct 2025புதுடெல்லி : டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
-
விமானம் மீது மோதிய பறவைகள்: டெல்லி புறப்பட்ட விமனம் அவசர தரையிறக்கம்
11 Oct 2025டெல்லி : டெல்லி புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதையடுத்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயல்: 2 ராணுவ வீரர்கள் பலி
11 Oct 2025கிஷ்த்வார் : ஜம்மு-காஷ்மீரில் பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
நோபல் பரிசு விவகாரம்: ட்ரம்பின் அமைதி முயற்சிக்கு புதின் பாராட்டு
11 Oct 2025மாஸ்கோ : ட்ரம்பின் அமைதி முயற்சிகளுக்கு புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திருமாவளவன் நேரில் நிதியுதவி
11 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களை திருமாவளவன் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினார்.