எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இரு பிரிவுகளாக புறப்பட்டது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்தது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இந்த தொடருடன் கோலி ஓய்வு அறிவிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி ரசிகர்களிடையே பேசும் பொருளாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்று வைத்துள்ளார். அதில் "நீங்கள் உண்மையிலேயே தோல்வி அடைவது, நீங்கள் விட்டுக்கொடுக்க முடிவு செய்யும் போதுதான் என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.
குல்தீப் யாதவ் முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் ஜோ ரூட், ஹாரி புரூக் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தொடருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 175 ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரு இடம் முன்னேறி மறுபடியும் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் பும்ரா ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 14-வது இடத்தை பிடித்துள்ளார்.
பாக்., அணிக்கு புதிய கேப்டன்?
டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை சல்மான் அகா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அணியின் துணைக் கேப்டனாக ஷதாப் கான் செயல்படுகிறார். காயம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு துணைக் கேப்டனான ஷதாப் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஷதாப் கான் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ள நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆல்ரவுண்டரான ஷதாப் கான் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 70 ஒருநாள் மற்றும் 112 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். கடந்த ஜூனில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசியாக அவர் விளையாடியிருந்தார். அதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. இந்த நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கான புதிய கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸி. - இங்கி. வீரர்கள் மோதல்
முன்னாள் வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் தொடர் குறித்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆஷஸ் தொடர் வருகிற நவ.21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் திடலில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நவ.21ஆம் தேதி முதல் போட்டியும் ஜன.4ஆம் தேதி கடைசி போட்டியும் நடைபெற இருக்கின்றன. இதுவரை நடந்த 73 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 34 முறையும் இங்கிலாந்து 32 முறையும் வென்றிருக்கின்றன. இன்னும் 50க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இரு நாட்டு வீரர்களும் இதுகுறித்து பேசத்தொடங்கியுள்ளனர்.
முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் இது பற்றி பேசியதாவது: கம்மின்ஸ் இல்லையென்றால் 3-1 எனவும் கம்மின்ஸ் இருந்தால் 4-0 எனவும் ஆஸ்திரேலியா வெல்லும். கம்மின்ஸ் இல்லாவிட்டால் முதல் டெஸ்ஸ்டை இங்கிலாந்து வெல்லாம். நாங்கள் ஆஷஸ் தொடரை வெல்வதற்காக விளையாடுவோம். அவர்கள் எப்போதும்போல தார்மீக வெற்றிக்காக விளையாடுவார்கள் என்றார். இங்கிலாந்து அணி தொடர்களில் தோற்கும்போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்லி ஏமாற்றுவதைக் கிண்டல் செய்யும் வகையில் வார்னர் பேசியிருந்தார்.
டேவிட் வார்னரின் இந்தப் பேச்சுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவர்ட் பிராட் பதிலடி தந்துள்ளார். அவர் பேசியதாவது: 2010க்குப் பிறகு இருப்பதிலேயே மிகவும் பலவீனமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கிறது. இது வெறுமனே ஒரு கருத்து அல்ல, உண்மை இதுதான். கடைசியாக 2010-இல் இங்கிலாந்து வென்றிருந்தது. தற்போது இருக்கும் இங்கிலாந்து அணி 2010-க்குப் பிறகான சிறந்த அணியாக இருக்கிறது என்றார். ஆஷஸ் தொடர் குறித்து, இரு நாட்டு வீரர்களும் மாறிமாறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
லக்னோ அணியில் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். மொத்தமாக, அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக இருந்து, 105-107 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு அறிமுகமாகி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் குஜராத் டைடன்ஸ் (GT) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
அவர் சமீபத்திய 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடினார் (மொத்தம் 27 ரன்கள்), மேலும் 2025 சீசனுக்கு மெகா ஆக்சனில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில் லக்னோ அணியின் ஸ்ட்ராடெஜிக் அட்வைசராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜென்டீனா இறுதிக்கு தகுதி
யு-20 உலகக் கோப்பைக்கான அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவும் கொலம்பியாவும் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மேடியோ சில்வெட்டி கோல் அடித்து அசத்தினார். இவர் சமீபத்தில் மெஸ்ஸி விளையாடும் இன்டர் மியாமி அணியில் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் மோதின. அந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிய ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது. அதில் மொராக்கோ 5-4 என த்ரில் வெற்றி பெற்றது.
யு-20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொராக்கோ அணியும் ஆர்ஜெண்டீனாவும் அக்.20ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மோதவிருக்கிறது. ஆடவர் கால்பந்து உலகக் கோப்பையை 2022ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா வென்றது. அதேபோல் யு-20 உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்துமா என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


