எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாடு முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தெரிவித்துள்ளது.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்களும் நேற்று (18-ந்தேதி) முதல் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழகம் முழுவதிலும் 2,705 இடங்களில் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்) விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்வதற்கு 9,207 கடைகளுக்கு தடையின்மைச் சான்றும், சென்னையில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்வதற்கு 1,088 கடைகளுக்கு தடையின்மைச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுவதும் 770 கடைகளுக்கும், சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கும் தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


