முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

புதன்கிழமை, 22 அக்டோபர் 2025      தமிழகம்
Farmer 2024-11-25

Source: provided

திருவாரூர் : கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தொடர் மழையால் நன்னிலம், பூந்தோட்டம், முடிகொண்டான், கொல்லுமாங்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவிட்டு சாகுபடி செய்துள்ள நிலையில் வயலில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுக தொடங்கி விட்டன. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே உடனடியாக வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் வயலில் பயிர்கள் சாய்ந்து விட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடன் வாங்கி பயிர் செய்த நெல் அறுவடை செய்ய முடியாமல் போனதால் கண்ணீரில் தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து