Idhayam Matrimony

மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுமார் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகள், தங்கள் பெயரை எரோ-நெட் தளத்தில், வாக்குச்சாவடி அதிகாரியாக பதிவு செய்ய தவறி உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் பதிவு அதிகாரியிடம் இருந்து பல முறை நினைவூட்டல் வழங்கப்பட்டும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இத்தகைய தவறு வேண்டுமென்றே நடந்திருப்பதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 32-ம் பிரிவின் கீழ் கடுமையான தேர்தல் கடமை நிறைவேற்றாத குற்றம் என அந்த நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த அதிகாரிகள் பதிலளிக்க தவறினால் அவர்கள் மீது சட்டம் மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து