எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம், மே.15 - திருமங்கலம் நகரில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வார்டு செயலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த தி.மு.க. வினர் திருமங்கலம் நகரில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் போது 3 அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்சின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதுபற்றி தகவலறிந்த மதுரை சரக டி.ஐ.ஜி சந்தீப்மிட்டல், மதுரை எஸ்.பி., அஸ்ரா கார்க் ஆகியோர் திருமங்கலம் நகருக்கு விரைந்து வந்து குற்றவாளிகள் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். அதன்பேரில் டி.எஸ்.பி முருகேசன் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய டவுன் போலீசார் பஸ்களை கல்வீசி தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 6 வது வார்டு தி.மு.க. செயலாளர் கணேசன்(எ)மைனா கணேசன், தி.மு.க. நகரச்செயலாளரின் கார் டிரைவர் பாண்டி, காங்கிரஸ் பிரமுகர் முருகேசனின் மகன் செல்வகுமார், மறவன்குளம் மகேஷ்வரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


