எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12 மாநிலங்களில்...
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 20 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. பீகாரைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள், நாளை (நவ. 4) முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆலோசனை கூட்டம்...
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது என்றும், கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும் எனவும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏற்க இயலாதது...
தீர்மானத்தில், பீகார் மாநில எஸ்.ஐ.ஆர். வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், குறிப்பாக அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளிவராத காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) கொண்டு வந்துள்ளது ஏற்க இயலாதது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இந்த எஸ்.ஐ.ஆர்.-க்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தேர்தல் ஆணையம்...
நமது அச்சத்துக்கு மிக முக்கியமான காரணம், பீகார் மாநிலத்தில் நடைபெற்றவை ஆகும். சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.,வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு பீகார் மாநிலத்தில் இந்த நடவடிக்கையானது நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்தப் பதிலையும் மக்கள் மன்றத்துக்கோ, சுப்ரீம் கோர்ட்டுக்கோ இந்தியத் தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. மத்திய பா.ஜ.க.,வின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
12 மாநிலங்களில்...
பீகாரில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 169-இன்படி ஒன்றிய அரசின் அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமே வாக்காளர் பட்டியல் திருத்தம் எஸ்.ஐ.ஆர். செய்யப்பட வேண்டும். அந்த முறையைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பைத் தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் எதிரானது.
சட்டவிரோதமாகும்...
இப்போது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர். அறிவிப்பே சட்டவிரோதமாகும். ஆதார் அட்டையை 12-ஆவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 27.10.2025 அறிவிப்பில் தெளிவற்ற முறையில் ஆதார் பற்றி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சரிபார்ப்பில் நேர்மைத்தன்மை இல்லை; வெளிப்படைத்தன்மை இல்லை. அந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. “ஆதார் சில நிபந்தனைகளுடன் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்பதே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடாக உள்ளது.
குழப்பமாக உள்ளது...
அதே அறிவிப்பின் இணைப்பு-III-இல் “வாக்காளர் பிறந்த தேதி தொடர்புடைய ஆவணங்களை வாக்குப் பதிவு அதிகாரிக்கு அவர் கேட்கும் போது கொடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்போது கேட்பார்கள்? தரப்படும் நோட்டீஸ் எந்த படிவத்தில் யார் தருவார்? எந்த படிவத்தில் ஆவணங்கள் தரப்பட வேண்டும்? ஆவணத்தைச் சமர்ப்பிக்க எவ்வளவு நாட்கள் தரப்படும்? யாரிடம் தர வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடையில்லை. இது தேர்தல் ஆணையம் ஏற்படுத்தும் குழப்பத்தைக் காட்டுகிறது.
அதிக சந்தேகத்தை...
இப்படி குழப்பி, உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது என்றே தெரிகிறது. ஒரு வாக்காளர் ஆவணம் வழங்க வேண்டுமா வேண்டாமா, யாரிடம் வழங்குவது என்ற எந்த அடிப்படை கேள்விகளுக்கும் உரிய பதில்களும் - விளக்கங்களும் இல்லை. இந்தக் குழப்பமானது தகுதிபெற்ற வாக்காளர்களை நீக்கவே பயன்படும். தேர்தல் ஆணையத்தின் அவசரமே நமக்கு அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.
பருவமழை காலம்...
கணக்கெடுப்பு காலம் என நிச்சயிக்கப்பட்டுள்ள 04.11.2025 முதல் 04.12.2025 வரையிலான காலம் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலம் ஆகும். இந்த காலத்தில் கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக - விவசாயிகளாக இருப்பதால், கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற நியாயமான அச்சம் உள்ளது.
வாக்குரிமையை...
வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும் . எனவே, இந்த காலம் கணக்கெடுப்புக்கு உகந்த காலம் இல்லை என்று இக்கூட்டம் கருதுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் திருநாள் ஆகியவை இருக்கிறது. இதனால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று இக்கூட்டம் தனது அச்சத்தைப் பதிவு செய்ய விரும்புகிறது.
அதிகாரத்தை வழங்கி...
வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி என்பது நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியம்; நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்மூச்சாகக் கருதப்படுகிறது. அரசியல் சட்டமும் - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும் தேர்தல் ஆணையத்திற்கு இதற்காகவே அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. நடுநிலைமையுடன், பாரபட்சமின்றி எந்த அரசியல் கட்சிக்கும் துணை போகாமல் சுதந்திரமான அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமகளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் மிக முக்கியமான கடமையைத் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் சட்டம் ஒப்படைத்துள்ளது.
ஒரு கட்சி சார்பாக...
ஆனால் பொறுப்புள்ள கடமையை நிறைவேற்ற வேண்டிய தேர்தல் ஆணையமே மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சியின் சார்பாக நின்று செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் உள்ள எஸ்.ஐ.ஆர். வழக்கில் இறுதித்தீர்ப்பு வராத நிலையில், தனது 27-10-2025 அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நடத்துவதாக அறிவித்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமான, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு எதிரான செயலாகும். எனவே இந்த எஸ்.ஐ.ஆர். ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஆகவே இந்த எஸ்.ஐ.ஆர். சீராய்வை தேர்தல் ஆணையம் இப்போது கைவிடும்படி அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கிறது.
தேர்தலுக்குப் பின்பு..
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்.-ஐ நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இந்தக் கருத்துகளை ஏற்காததால், தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரின் வாக்குரிமையையும் நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது எனவும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 


