முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
Vijay-2-2025-09-13

Source: provided

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்து உள்ளது. ஏற்கனவே கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 31 மற்றும் 1-ந் தேதிகளில் நவீன ஸ்கேனர் கருவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த சம்மனின் அடிப்படையில் நேற்று முன்தினம் 13 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

நேற்று முன்தினம் காலை நகை அடகுக்கடை, பேக்கரி, மருந்து கடை, ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட மொத்தம் 12 பேர் சி.பி.ஐ. சார்பில் அனுப்பப்பட்டிருந்த சம்மனின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடைபெற்றபோது கடை திறக்கப்பட்டிருந்ததா?, சம்பவத்தின்போது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்தும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. காலை 9 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை வரை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து