எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. பெரும்பாலான மக்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பற்றி இன்னமும் முழுதாக தெரியவில்லை.
சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை. ஆனால், போதுமான கால அவகாசம் கொடுக்காமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நமது நிலைப்பாடு. தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க. எப்படி எல்லாம் மோசடி செய்துள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விளக்கி இருக்கிறார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கூட எஸ்.ஐ.ஆர்.-ஐ தீவிரமாக எதிர்க்கிறார்கள். நாமும் எஸ்.ஐ.ஆர். அறிவித்த உடனே இது சதி என உணர்ந்து எதிர்த்தோம். கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசினோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறோம். வரும் 11ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளோம்.
அதற்கு முன்பாக, எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் எத்தனை பிரச்சினைகள், குழப்பங்கள் இருக்கின்றன என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கும் கணக்கீட்டு படிவம் கொடுத்திருக்கிறார்கள். உங்களில் சிலரிடமும் இந்த படிவம் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும்.
இதில் முதலில் நமது விவரங்களைக் கேட்கிறார்கள். அடுத்தாக, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினர் என்றால் யார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. அப்பாவா, அம்மாவா, அண்ணனா, தங்கையா, கணவனா, மனைவியா, பிள்ளைகளா யார்? எல்லோரும்தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?
வாக்காளரின் உறவினர் பெயர் என சொல்லப்பட்டுள்ள இடத்தில் முதலில் பெயரும் அடுத்ததாக வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண்ணும் கேட்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மீண்டும் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. முதலில், யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா அல்லது உறவினர் பெயரா?
சிறிய தவறு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் பெயரை நீக்கும் ஆபத்தும் உள்ளது. நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. நன்றாகப் படித்து பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள்கூட இந்த கணக்கீட்டுப் படிவத்தைப் பார்த்தால் அவர்களுக்கும் தலை சுற்றும்.
இந்த படிவித்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மாநில தேர்தல் அதிகாரி, உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒட்டலாம் என்று அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். இது மற்றுமொரு இடியாப்ப சிக்கல்.
ஒருவேளை போட்டோ ஒட்டவில்லை என்றால் என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுா, படாதா? தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி அதாவது இ.ஆர்.ஓ. கையில்தான் இந்த முடிவு உள்ளது. இவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. இப்படி முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற கதையாக எல்லா இடத்திலும் குழப்பம்தான்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அதிமேதாவிகள், இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள்தான் எனும்போது ஏன் தி.மு.க. எதிர்க்க வேண்டும் என்ற புரிதலற்ற உண்மைக்குப் புறம்பான விவரங்களை வைத்துப் பேசுகிறார்கள். ஒரு பணியாளரை தேர்தல் ஆணையம் தனது பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே அவர் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்.
மக்களை திசை திருப்பினால் போதும் என தவறான தகவலை பரப்பக்கூடாது. எதையாவது பொய் சொல்லி எப்படியாவது எஸ்.ஐ.ஆர்.-ஐ நடத்திடலாமா, ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை நீக்கிடலாமா என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது.
எஸ்.ஐ.ஆர். தொடங்கிய நாளில் இருந்து களத்தில் இருக்கும் தி.மு.க.வினரும் நிறைய பிரச்சினைகளை நமது கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். பி.எல்.ஓ.-க்கள் வருவதில்லை, வந்தாலும் போதுமான எண்ணிக்கையில் கணக்கீட்டுப் படிவங்களைக் கொண்டு வருவதில்லை, நாள் ஒன்றுக்கு 30 படிவங்களுக்கு மேல் தருவதில்லை.
இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியின் இ.ஆர்.ஓ. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை இத்தனை குறுகிய கால அவகாசத்தில் எப்படி கொடுத்து வாங்குவார்கள்? வாங்கிவிட்டால் வேலை முடிந்ததா? அதுவும் இல்லை. அதை கனிணி மயமாக்கி வரும் டிசம்பர் 7ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் எப்படி இதையெல்லாம் செய்து முடிக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது.
தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து சொல்வது போல அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் இதன்மூலம் உறுதியாகிறது. பி.எல்.ஓ.-க்கள் தங்கள் பணிகளை சரிவர செய்யவில்லை என்றால் இந்த எஸ்.ஐ.ஆர். பணியே மொத்தமாக பாதிப்பை சந்திக்கும். பி.எல்.ஓ.-க்களும் கட்சியின் பி.எல்.ஓ. 2-க்களும் இணைந்து செயல்பட தேவையான அனைத்தையும் செய்வோம் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், அதற்கான ஒரு சூழலை அவர்கள் இதுவரை உருவாக்கவில்லை. தி.மு.க. பி.எல்.ஓ.2 தயாராக இருந்தாலும்கூட பல இடங்களல் பி.எல்.ஓ.க்கள் வராமல் இருக்கிறார்கள்.
இதையெல்லம் மீறித்தான் நமது செயல்வீரர்கள் விழிப்பாக செயல்பட்டு வருகிறார்கள். உங்கள் வாக்கு நீக்கப்படுமா என்று கேட்டால், அப்படி ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது. இல்லை என்று சொல்லிட முடியாது. அதை தடுக்க வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்குரிய பி.எல்.ஓ. யார் என்று கேட்டு அவரிடம் இருந்து கணக்கீட்டுப் படிவத்தை வாங்கி சரியாக நிரப்பி திரும்ப சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஒப்புகைச் சீட்டையும் மறக்காமல் வாங்க வேண்டும். இதுதான் உங்கள் வாக்குரிமையை பாதுகாக்கும்.
வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படையான மறுக்க முடியாத உரிமை. தற்போதைய நிலையில் எஸ்.ஐ.ஆர்.-ல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள தி.மு.க. சார்பில் உதவி மையம் அமைத்துள்ளோம். இது தி.மு.க.வினருக்கு மட்டும் அமைத்திருக்கும் உதவி மையம் அல்ல. எல்லோருக்குமானது.
எனவே, தி.மு.க. நிர்வாகிகள் மட்டுமல்லாமல், எஸ்.ஐ.ஆர்.-ல் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கக்கூடிய 08065420020 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காக்க திமுக உங்கள் தோழனாக துணை நிற்க தயாராக இருக்கிறது. நமது வாக்குரிமையை பறிக்கக்கூடிய ஆபத்து நமது வாசல் தேடி வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்போடு இருந்து தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். நமது வாக்குரிமையை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விளக்கத்தில் முக்கிய அம்சங்கள்:
1) சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை.
2) அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதை தான் எதிர்க்கிறோம்.
3) எஸ்.ஐ.ஆர். சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.
4) வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே குழப்பம் உள்ளது.
5) உறவினர்கள் பெயரை தேர்தல் ஆணையம் கேட்கிறது, உறவினர் என்றால் யார்?
6) தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
7) ஏதாவது பொய்யை சொல்லி ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பறிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
துருக்கியில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
09 Nov 2025அங்காரா : பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
09 Nov 2025சென்னை : இ.பி.எஸ். வீடு, பா.ம.க., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
09 Nov 2025திருப்பதி : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Nov 2025தென்காசி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
09 Nov 2025ஐதராபாத் : தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
தாக்குதல்கள் நடத்த சதி திட்டம்: குஜராத்தில் 3 பேர் கைது
09 Nov 2025அகமதாபாத் : நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Nov 2025சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள
-
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் தினமும் கூடுதல் வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
09 Nov 2025பெங்களூரு : கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது.
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர் நாடு கடத்தல்
09 Nov 2025ஐதராபாத் : இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தப்பட்டார்.
-
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை
09 Nov 2025டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல பிரச்சினைகள்-குழப்பங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்
-
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி இனி கட்டாயம் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
09 Nov 2025சென்னை : குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து
09 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 1,200 விமானங்கள் ரத்து செய
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை திருச்சியில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025சென்னை : திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.
-
அந்தமான் கடலில் நிலநடுக்கம்
09 Nov 2025போர்ட் பிளேர் : அந்தமான் கடலில் நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் விழா: ரூ.773 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025திருச்சி : திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.773.
-
பீகாரில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை வாக்குப்பதிவு
09 Nov 2025பாட்னா : பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையிடுன் பிரச்சாரம் ஓய்ந்தது.
-
2-ம் கட்ட தேர்தலிலும் பீகார் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள் : தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
09 Nov 2025பாட்னா : பீகார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று மகா கூட்டணிய
-
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளுக்கு
-
36-வது பிறந்தநாள்: தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2025சென்னை : 36-வது பிறந்தநாளை முன்னிட்டு தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வாக்கு திருட்டு விவகாரத்தில் மேலும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்: ராகுல் காந்தி பேட்டி
09 Nov 2025பச்மாரி : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை.


