முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட தேர்தலிலும் பீகார் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள் : தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2025      இந்தியா
Tejasvi-2025-10-23

Source: provided

பாட்னா : பீகார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள் (நேற்று). சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பீகார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள். பிரதமராக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, எங்கள் அரசாங்கம் 17 மாதங்களாக வழங்கிய இடஒதுக்கீட்டைப் பற்றி யாரும் பேசவில்லை. மக்களின் 65 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் தின்றுவிட்டார். அவர்கள் பீகாருக்கு என்ன கொடுத்தார்கள், குஜராத்துக்கு என்ன கொடுத்தார்கள் என்பது பற்றி பேச வேண்டும்” என்று கூறினார்.

இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஜனதா தள ஆதரவாளர்கள் தேஜஸ்வி யாதவின் பிறந்தநாளை முன்னிட்டு பாட்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ‘பீகார் முதல்வர் தேஜஸ்வி யாதவ்’ என்ற சுவரொட்டிகளும் அவரது வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்தன.

சமஸ்திபூர் மாவட்டத்தின் சரைரஞ்சன் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கே.எஸ்.ஆர் கல்லூரி அருகே சிதறிக்கிடந்த விவிபாட் சீட்டுகள் தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டியது. அக்கட்சியின் எக்ஸ் பதிவில், "சமஸ்திபூரின் சரைரஞ்சன் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கேஎஸ்ஆர் கல்லூரி அருகே சாலையில் ஏராளமான விவிபாட் சீட்டுகள் சிதறிக் கிடந்தன. எப்போது, ​​எப்படி, ஏன், யாருடைய உத்தரவின் பேரில் இந்த சீட்டுகள் தூக்கி எறியப்பட்டன? திருடர்கள் ஆணையம் இதற்கு பதிலளிக்குமா? வெளியில் இருந்து வந்து பீகாரில் முகாமிட்டிருக்கும் ஜனநாயகக் கொள்ளையர்களின் அறிவுறுத்தலின் பேரில் இவை அனைத்தும் நடக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து