முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் சேஹா பகுதியில் மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பாயிலர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் , போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வெடி விபத்தால் ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து