எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சனிக்கிழமை(நவ.15) நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள், பணியின்போது உயிரிழந்த 2 தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 1,260 மாணவர்களுக்கு அனைத்து விதமான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக ரூ.2.82 கோடிக்கான உதவிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ், 1,000 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் உதவித் தொகைக்கான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.
தூய்மை பணியாளர் நல வாரியம்:
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலன் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் 2007-ஆம் ஆண்டு “தூய்மை பணியாளர் நல வாரியம்” அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்திட 14.8.2025 அன்று 6 புதிய சிறப்புத் திட்டங்களை அறிவித்திருந்தார்கள்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்விற்காக அறிவிக்கப்பட்ட அந்த புதிய அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டம், குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் புதிய நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
முதல்வரின் உணவுத் திட்டம்:
பெருநகர சென்னை மாநகராட்சியில் காலை, மதியம் மற்றும் இரவு என என சுழற்சி முறையில் பணியாற்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்திற்காக உணவு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதால், பெருநகர சென்னை மாநகராட்சியில், நிரந்தர மற்றும் சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள், மலேரியா தொழிலாளர்கள், தூய்மைப் பணிக்கான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மயான பூமி தூய்மைப் பணியாளர்கள், தனியார் பொது பங்களிப்பில் செயல்படும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளர்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், மாநகராட்சியில் கள பணிகளில் ஈடுபடும் சாலை பணியாளர்கள், என மொத்தம் 31,373 பணியாளர்களுக்கு நாள்தோறும் வெப்பம் தாங்கும் பைகளில் சிற்றுண்டி தாங்கி பெட்டிகள் மூலம் சுகாதாரமான உணவு வழங்கப்படும்.
குடியிருப்பு ஒதுக்கீடு திட்டம்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீட்டு கழிவுகளை அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முதற்கட்டமாக கார்கில் நகர் திட்டப்பகுதியில் 510 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் பகுதி-III திட்டப்பகுதியில் 490 குடியிருப்புகளும், என மொத்தம் 1,000 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,அதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
ரூ.10 லட்சம் நிதியுதவி திட்டம்
இத்திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியின்போது உயிரிழந்த 2 தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர், சுயமாக தொழில் தொடங்குவதற்கு ரூ.3.50 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்கிடும் வகையில், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 25 பயனாளிகளுக்கு மொத்த திட்ட தொகையான ரூ.46 லட்சத்தில் ரூ.16 லட்சம் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
உயர் கல்வி உதவித்தொகை திட்டம்:
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் 1,260 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர திட்டங்களின்படி வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையுடன் கூடுதலாக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் அவர்கள் உயர்கல்வி பயிலும்பொழுது அவர்களுக்கு அனைத்து விதமான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்காக ரூ.2.82 கோடி நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
தாட்கோ நிறுவனம் மூலம் திட்டங்கள்:
தூய்மைப் பணிபுரிவோர் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளான விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கருச்சிதைவு உதவித் தொகை, கண் கண்ணாடி வாங்க உதவித் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 1,000 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் உதவித் தொகைக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்விற்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அதனை செயல்படுத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு தூய்மைப் பணியாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்: ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. விளக்கம்
15 Nov 2025ஸ்ரீநகர், காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்து தான் என்று ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. நலின் பிரபாத் தெரிவித்துள்ளார்.
-
வேடந்தாங்கலில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
15 Nov 2025சென்னை, வேடந்தாங்கலில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன.
-
20 ஆயிரம் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது: அண்ணாமலை
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு; மேலும் ஒரு டாக்டர் பஞ்சாப்பில் கைது
15 Nov 2025சண்டிகார் : டெல்லியில் கார் வெடி வழக்கில் பஞ்சாபில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
பீகார் தேர்தல் இறுதி நிலவரம்
15 Nov 2025பாட்னா : பீகார் இறுதி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
15 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிந்தது.
-
கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு
15 Nov 2025திருப்போரூர், கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
அரசியலில் இருந்து விலகினார் லல்லு பிரசாத் மகள் ரோகிணி
15 Nov 2025பாட்னா, அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று லல்லு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
பயங்கரவாத அச்சுறுத்தல்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கார்கே வலியுறுத்தல்
15 Nov 2025டெல்லி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.



