எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமராவதி : ஆந்திராவில் பெண்கள் உள்பட 50 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.
இதனிடையே, ஆந்திர மாநிலம் அல்லுரி சீதா ராமராஜு மாவட்டம் மாரேடுமில்லி மண்டலம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி மாட்வி ஹிட்மாவும் அடக்கம்.
இந்நிலையில், மாவோயிஸ்டுகள் என்கவுன்டரை தொடர்ந்து ஆந்திராவில் 5 மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பெண்கள் உள்பட 50 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள், ரூ. 13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


