எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் வராத தொழில் முதலீடுகளை வந்ததாகக் கூறி மோசடி செய்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த வினாவுக்கு விடையளிக்க முடியாத தி.மு.க. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பா.ம.க. தலைவர் மீது தனிமனித விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள முடியாத தயாநிதி மாறன், அவரது அதிகாரத் திமிரை காட்ட முற்படுவது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன்மூலம் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் தி.மு.க. பொய்ப் பரப்புரை செய்து வரும் நிலையில், அவ்வளவு முதலீடுகள் வரவில்ல்லை என்பதையும், வெறும் 8.8 சதவீத முதலீடுகள் மட்டுமே வந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்களுடன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆவணம் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
தி.மு.க. அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான அந்த ஆவணம் வெளியானதில் இருந்தே தங்களின் மோசடி அம்பலமாகி விட்டதால் தி.மு.க.வினர் எதை எதையோ உளறத் தொடங்கி விட்டனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனிடம், தி.மு.க.வின் தொழில் முதலீட்டு மோசடிகள் குறித்து வினா எழுப்பினர். அதற்கான பதில் இருந்தால் அதை தயாநிதி மாறன் கூறியிருக்கலாம்; இல்லாவிட்டால் என்னிடம் பதில் இல்லை என்று கூறி கடந்து சென்றிருக்கலாம். ஆனால், அதை விடுத்து,‘‘அவரை முதலில் அவங்க அப்பாவை பார்க்கச் சொல்லுங்க’’ என்று கூறியுள்ளார். இது அநாகரீகத்தின் உச்சம். தி.மு.க.வினரின் ரத்தத்தில் ஊறிய கலாச்சாரத்தை அப்படியே அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தயாநிதி மாறனின் குடும்பத்திலும், அவர் சார்ந்த தி.மு.க.வின் முதல் குடும்பத்திலும் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மோதல்கள் பற்றி பொதுவெளியில் பேசக் கூட முடியாது. அந்த அளவுக்கு அந்த மோதல்களால் அருவருக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தன. தமது முதுகில் இருக்கும் சாக்கடையைத் துடைக்காமல் எங்கள் தலைவர் மீது தயாநிதி மாறன் பாய்வது அவரது இயல்பையும், குணத்தையும் காட்டுகிறது.
2007-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் முதல் குடும்பத்தில் உள்ளவர்களின் அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் தயாநிதி மாறனின் குடும்ப நாளிதழில் ஒரு தரப்புக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டதையும், அதனால் ஆத்திரம் அடைந்த எதிர்த்தரப்பு மதுரை தினகரன் அலுவலகத்தை தீயிட்டு எரித்ததையும், அதில் அப்பாவி ஊழியர்கள் மூவர் உயிருடன் கருகி இறந்ததையும் தமிழ்நாடு இன்னும் மறந்து விடவில்லை.
மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் தினகரன் நாளிதழின் முதல் பக்கத் தலைப்பு செய்தியில், ‘ரவுடி அழகிரி’ என்று தலைப்பிட்டு செய்திகள் வெளியிடப்பட்டதை அனைவரும் அறிவர். அதன்பின் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்று, கொஞ்சமும் வெட்கமின்றி, யாரை ரவுடி என்று மாறன் குடும்பம் விமர்சித்ததோ, அவரையே கட்டித் தழுவி, இதயம் இனித்தது, கண்கள் பனித்தன என்று வசனம் பேசிய வரலாறை எல்லாம் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மறக்கவில்லை.
தி.மு.க.வின் முதல் குடும்ப மோதலைத் தொடர்ந்து கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி விவாதித்து தயாநிதி மாறன் அமைச்சரவையிலிருந்தும், தி.மு.க.விலிருந்தும் நீக்கப்பட்டது இன்னும் நினைவிலிருந்து அகல வில்லை. மாறன் குடும்ப நிறுவனங்களில் தங்களுக்குரிய பங்கை முழுதாக தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் குற்றஞ்சாட்டியதும், அதன் பின் மாறன் குடும்பத்தை மிரட்டி பெரும் தொகை வசூலிக்கப்பட்டதும் வரலாறு.
அவ்வளவு ஏன்... சில வாரங்களுக்கு முன் தமது மூத்த சகோதரர் தங்களின் குடும்ப சொத்துகளில் தமக்கு உரிய பங்கை தராமல் ஏமாற்றி விட்டார் என்று சொந்த சகோதரனுக்கே வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது தயாநிதி மாறனுக்கு மறந்து விட்டதா? அதைத் தொடர்ந்து நடந்த திரைமறைவு பேரங்களுக்குப் பிறகு அந்த வழக்கறிஞர் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது நினைவில்லையா? தி.மு.க.வின் முதல் குடும்பத்தில் நடந்த இந்த மோதல்கள் குறித்தெல்லாம் விவாதம் நடத்துவதற்கு தயாநிதி மாறன் தயாராக இருக்கிறாரா?
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும். ஆனால், அவற்றின் ஒன்று கூட தயாநிதி மாறனுக்கு இல்லை. தமிழ்நாட்டில் நாகரீகமான, வளர்ச்சி அரசியலை செய்ய வேண்டும் என்று எங்கள் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதைத் தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
தயாநிதி மாறனுக்கு அவரது பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் அவரால் தாக்குபிடிக்க முடியாது; அத்தகைய அரசியலை செய்வதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை. இதை உணர்ந்து தயாநிதி மாறன் இனியாவது நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தல்
19 Nov 2025ஜோகன்னஸ்பெர்க் : தனி விமானம் மூலம் சட்டவிரோதமாக தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
-
கோவை பயணம் குறித்து தமிழில் பதிவிட்ட பிரதமர்
19 Nov 2025புதுடெல்லி : கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு
20 Nov 2025ராய்ப்பூர், பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
20 Nov 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைய பொதுமக்கள் கையில் தான் உள்ளது என்று சரத்துகுமார் கூறினார்.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
இலக்கிய மாமணி விருது: 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவிப்பு
20 Nov 2025சென்னை, தமிழறிஞர்கள் 3 பேருக்கு இலக்கிய மாமணி விருதுதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
மக்களாட்சி மாண்பை மதிக்காதவர் கவர்னர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Nov 2025சென்னை, மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
20 Nov 2025சேலம், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடைபெற இருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
20 Nov 2025புதுடெல்லி: மெட்ரோ திட்டம் நிராகரித்தது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பா.ஜனதா- சிவசேனா மோதல்: அமித்ஷாவுடன் ஷிண்டே சந்திப்பு
20 Nov 2025மும்பை: ஏக்நாத் ஷிண்டே திடீரென டெல்லிக்கு சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
-
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
20 Nov 2025சென்னை: வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர் மக்கள் அன்பு, பாசம் எப்போதும் இதயத்தில் நீங்கா இடம்: பிரதமர் மோடி பதிவு
20 Nov 2025புதுடெல்லி: கோயம்புத்தூர் மக்கள் அன்பு, பாசம் எப்போதும் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Nov 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை திறந்து வைத்து, உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர்
-
பீகார் புதிய முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு இ.பி.எஸ். வாழ்த்து
20 Nov 2025சென்னை, 10-வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.


