எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : புயல் எச்சரிக்கையையொட்டி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியிலிருந்து 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புயல் எச்சரிக்கையையொட்டி, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் 21.73 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி. அளவில், தற்போது 3.048 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
ஏரிக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடியாக மட்டுமே இருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டது. காலையில் மொத்தமாக 1,394 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில், உபரிநீராக 1,200 கனஅடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. சென்னை குடிநீர்த் தேவைக்காக 165 கன அடியும், சிப்காட் பயன்பாட்டுக்கு 4 கனஅடியும் நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த 1,200 கனஅடி நீர் இரவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, நீர்பாசனத் துறையினர் ஏரியின் நீர் இருப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


